முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பாக். ராணுவம் அத்து மீறல்: துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் - சிறுமி பலி

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : எல்லையில் நேற்று, பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் மற்றும் 9 வயது சிறுமி உயிரிழந்தனர்.

இந்தியா பதிலடி

காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாலாகோட், மாஞ்சாகோட் மற்றும் பிம்பெர் காலி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்தது. பிம்பெர் காலி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் கிராமவாசிகளை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 9 வயது சிறுமி சாஜிதா காபீல் உயிரிழந்தார்.

ராணுவ வீரர் பலி

பாலாகோட் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்து உள்ளார்.  ராஜோரி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அடாவடி தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் நாய்க் முத்தாசார் அகமது உயிரிழந்தார். அகமது ஜம்மு காஷ்மீரின் திரால் பகுதியை சேர்ந்தவர். பாகிஸ்தான் ராணுவம் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதை தொடர்ந்து இருநாட்டு டிஜிஎம்ஓ அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது. ராணுவ செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குநர்கள் தலைமையிலான பேச்சுவார்த்தை தொலைபேசி வாயிலாக நடந்தது. இதில் எல்லை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

4 வீரர்கள் பலி

இந்தியா எல்லையில் அமைதியை விரும்பும் நிலையில் பாகிஸ்தான் அடாவடியாக தாக்குதலை தொடர்ந்துள்ள நிலையில்,  இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்துவிட்டனர் என பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது. இந்திய ராணுவ தாக்குதலில் சிக்கிய எங்களது ராணுவ வாகனம் நீலம் ஆற்றில் விழுந்துவிட்டது என கூறிஉள்ளது பாகிஸ்தான். ஒரு ராணுவ வீரரின் சடலம் மீட்கப்பட்டதாகவும், மூன்று ராணுவ வீரரின் சடலத்தை தேடி வருவதாகவும் பாகிஸ்தான் கூறிஉள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து