எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கொடுங்கையூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தி.மு.க. புகாருக்கு சட்டசபையில் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
உறுப்பினர் கேள்வி ...
கொடுங்கையூரில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு படை வீரர் உயிரிழந்தார். ஏராளமானவர்கள் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது தொடர்பான பிரச்சினையை நேற்ரு சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. மாதவரம் சுதர்சனம் எழுப்பினார். தீ விபத்தில் காயம் அடைந்த அரசு ஊழியர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாகவும் சாதாரண மக்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டினார்.
பணி நியமனம் ...
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசினார். அவர் கூறியதாவது:-
15.7.2017 அன்று இரவு 11.17 மணியளவில் கண்ணதாசன் நகர், கொடுங்கையூரில் மூடியுள்ள பேக்கரியில் தீ விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக ஸ்டேன்லி அரசு மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 நோயாளர் ஊர்திகள் மற்றும் தனியார் ஊர்திகள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். தீயணைப்போர் ஏகராஜ் தலையில் பலத்த காயம் மற்றும் உடலில் ஏற்பட்ட தீக்காயங்களில் உயிரிழந்தார். அவரது வாரிசுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இழப்பீட்டு தொகை
மேலும், முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாயும், கருணைத் தொகை 10 லட்சம் ரூபாயும், என மொத்தம் 13 லட்சம் ரூபாய் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்திருந்த தீயணைப்போர் ராஜதுரை மற்றும் லட்சுமணன் ஆகியோரது உறவினர்களின் வேண்டுகோளின்படி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறை மானிய கோரிக்கையின்போது நான் அறிவித்த “எதிர்பாரா மருத்துவ நல நிதி” மூலம் இவர்களுக்கான மருத்துவ செலவு மேற்கொள்ளப்படும். இதற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 4 நபர்கள் ...
வெளிக்காயங்களுடன் இயந்திர கம்மியர் ஓட்டி ஜெயபாலன் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று 17.7.2017 அன்று வீடு திரும்பியுள்ளார். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு 30 நபர்கள் கொடுங்கையூரில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டு தீக்காயங்களுடன் தீக்காயப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். அன்றே, மேலும் 4 நபர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
48 பேருக்கு ...
இதே சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 11 நபர்கள் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டும் மற்றும் 2 நபர்கள் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவரையும் சேர்த்து மொத்தம் 48 பேருக்கு இச்சம்பவத்தில் தீக்காயம் ஏற்பட்டது. இவர்களில் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் 5 நபர்கள், தீயணைப்பு படை வீரர்கள் 4 நபர்கள், ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் மற்றும் பொது மக்கள் 38 பேர் ஆவர்.
புகையினால் பாதிப்பு ...
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முகம் மற்றும் மூச்சு குழாய்களில் வெப்பம் மற்றும் புகையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 32 நபர்களில், 12 நபர்கள் மருத்துவர் அனுமதியின்றி, உறவினர்களின் வேண்டுகோளின்படி தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள். மீதமுள்ள 20 நபர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும், 10 நபர்கள் ஸ்டான்லி மருத்துவ மனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
16 நபர்களுக்கு ...
நேற்று (நேற்று முன்தினம்) ஜெயபாலன், தீயணைப்புத்துறை வீரர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மீதமுள்ள 39 நபர்களில் 5 நபர்களுக்கு 60 முதல் 82 விழுக்காடு வரை தீக்காயங்கள் உள்ளன, 16 நபர்களுக்கு 40 முதல் 60 விழுக்காடு வரை தீக்காயங்கள் உள்ளது.12 நபர்களுக்கு, 20 முதல் 40 விழுக்காடுவரை தீக்காயங்கள் உள்ளன. மீதமுள்ள 6 நபர்களுக்கு 20 விழுக்காட்டிற்கு குறைவாக தீக்காயங்கள் உள்ளன.
வெளி நோயாளியாக ...
காவல்துறையைச் சேர்ந்தவர்களில் இருவர் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றனர். 3 காவல்துறையைச் சேர்ந்தவர்களும், ஊர்க் காவல்படை வீரர் ஒருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐந்து பொதுமக்களும் உறவினர்களின் வேண்டுகோளின்படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிறு தீக்காயங்களுடன் இரண்டு பொதுமக்கள் மருத்துவர் அனுமதியின்றி வீடு திரும்பியுள்ளனர்.
சிகிச்சை பெற்றுவரும் அனைத்து உள் நோயாளிகளுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தீவிர கண்காணிப்பு
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பேராசிரியர்கள், ஒட்டுறுப்பு அறுவை சிசிக்சை உதவி பேராசிரியர்கள் மற்றும் உள்ளிருப்பு மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட அனைவரையும் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும், 16.7.2017 அன்று காலை 7 மணி முதல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை உதவி பேராசிரியர்,பொது மருத்துவர், அறுவை சிகிக்சை மருத்துவர்,கண் மருத்துவர், எலும்பு சிகிச்சை நிபுணர், மயக்கவியல் நிபுணர், நரம்பு சிகிச்சை நிபுணர், சிறுநீரக சிகிச்சை நிபுணர், குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர், மனநல சிகிச்சை நிபுணர்கள் மற்றும் 35 செவிலியர்கள் உள்ளடக்கிய ஒரு சிறப்பு மருத்துவக் குழு ஏற்படுத்தப்பட்டு, இக்குழு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
உயர்தர சிகிச்சை ...
தீக்காயம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முழுமையான உலகத்தரம் வாய்ந்த உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில், தேவையான அனைத்து மருந்துகள், கருவிகள், பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம்சாரா பணியாளர்கள் இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற செய்தி உண்மை நிலைக்கு மாறானது.
தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.