முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈட்டி எறிதலில் வெற்றி பெற்ற மாணவிக்கு அரசு உதவி செய்யும் :அமைச்சர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை :  ஈட்டி எறிதலில் வெற்றி பெற்ற மாணவிக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று அணைக்கட்டு தொகுதி உறுப்பினர் நந்தகுமார் (தி.மு.க.) பேசும்போது, “எனது தொகுதியை சேர்ந்த ஒருகத்தூர் பள்ளி மாணவி ஹேமலதா அகில இந்திய அளவில் ஈட்டி எறிதல் போட்டியில் வெற்றி பெற்று உள்ளார்.

தற்போது காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்வதற்கு இங்கிலாந்து செல்ல இருக்கிறார். அவருக்கு தகுந்த உதவி வழங்க வேண்டும்” என்றார்.இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், “முதல்-அமைச்சருடன் கலந்து பேசி மாணவிக்கு தேவையான உதவிகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து