எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை.- சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி ்கோயிலில் வருகிற 23.07.2017 அன்று நடைபெறவுள்ள ஆடி அமாவாசை ிழா தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ், மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், ஆகியோர் தலைமையில்; டி.கல்லுப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
ிழாவின் போது சட்டம், ஒழுங்கு காத்து சுமூக நிலையை ஏற்படுத்திட ஏறத்தாழ 1300 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காவல்துறையினர், வனத்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையினருடன் இணைந்து பணியாற்றவும், மலையடிவாரப் பகுதிகளில் தேவையான அளவு சோதனைச் சாவடிகள் அமைத்து ்கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்களுடன் தடை செய்யப்பட்ட பொருட்களையோ, போதைப் பொருட்களையோ, தீப்பற்றக் கூடிய பொருட்களையோ அல்லது பிளாஸ்டிக் பைகளையோ எடுத்துச் செல்லவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத் ்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி மற்றும் மதுரை ஆகிய இடங்களிலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் அழகாபுரி வரை இயங்கவும், மேலும் அழகாபுரியிலிருந்து தாணிப்பாறைக்கு போதுமான தொடர்பேருந்துகள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக வெளியூரிலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு தற்காலிகமாக 7 வாகனக்காப்பகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
்கோயில் வளாகத்தில் மற்றும் மலைப்பாதையில் மின்னாக்கி மூலம் தேவையான அளவு மின் விளக்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மலைப்பாதையில் குறுகலான மற்றும் ஒற்றையடி பாதைகளை பக்தர்கள் செல்ல ஏதுவாக சீர்படுத்தி நல்ல முறையில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் குடிநீர் வசதிக்காக மலைப்பாதையில் ஒவ்வொரு அரை கிலோ மீட்டருக்கும் சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்படும். மேலும் சுந்தர மகாலிங்கம் கோயிலில் 85000 லிட்டர் தண்ணீரும், சந்தன மகாலிங்கம் கோயிலில் 35000 லிட்டர் தண்ணீரும் பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
மலைப்பாதையில் வயதான பக்தர்களின் வசதிக்காக 24 டோலிகள் காவலர்களின் உதவியோடு பணிபுரிவதற்கு ஏற்பாடு செய்யப்படும். குப்பைகளை சேகரிப்பதற்காக ஆங்காங்கே 100 குப்பைத்தொட்டிகள் அமைக்கப்படும். 14 இடங்களில் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். இக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக 9 இடங்களில் மருத்துவக்குழுக்கள் தேவையான மருந்துகளுடன் நியமிக்கப்படுவார்கள். 108 ஆம்புலன்ஸ்கள் 4ம், இருசக்கர ஆம்புலன்ஸ் 2ம், 2 நடமாடும் மருத்துவக்குழுக்களும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்படும்.
சுகாதாரப்பணிக்காக 54 துப்புரவுப்பணியாளர்கள் நியமிக்கப்படுவர். வாழைத்தோப்பு, தாணிப்பாறை, வத்திராயிருப்பு, மாவூத்து, சதுரகிரி மலைப்பாதை மற்றும் கோயில் பகுதிகளில் 25 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலர்கள், காவல் துறை மற்றும் வனத்துறையினருடன் இணைந்து பணியாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், மதுபானங்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை வனப்பகுதிக்குள் பக்தர்கள் எடுத்துச்செல்லக் கூடாது என பக்தர்களுக்கு மலையேறும் முன் விளம்பரம் செய்திட ஏற்பாடு செய்யப்படவுள்ளது. அத்துடன் பக்தர்கள் செல்லும் மலைப்பாதையில் காவல்துறை, மருத்துவத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர்களிடம் குழு அமைத்து, அக்குழுவினர் தொடர்ச்சியாக மலைப்பாதையில் சென்று தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் தாணிப்பாறை வழியாக வருகின்ற 20.07.2017 முதல் 25.07.2017 வரை சுவாமி தரிசனம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை தாணிப்பாறை வழியாக மலையின் மீது ஏறி சென்று வர அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன்,இ.கா.ப., விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.இராசராசன்,இ.கா.ப., மதுரை மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, பயிற்சி ஆட்சியர் ரஞ்சித் சிங்,இ.ஆ.ப., விருதுநகர் மாவட்ட வன உயிரின காப்பாளர் அசோக்குமார்,இ.வ.ப., மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செந்தில்குமாரி, உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) லெட்சுமி, பேரையூர் வட்டாட்சியர் உதயச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி18 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 17 hours ago |
ரவா பர்பி1 week 19 hours ago |
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
'நான் முதல்வன்' இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Apr 2024சென்னை : ‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? - தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிடு
17 Apr 2024சென்னை : மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? என்பது குறித்து தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிட்டுள்ளது.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
3-ம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு 3 மாதங்களில் முடிக்கப்படும்: தமிழக அரசு
17 Apr 2024சென்னை : கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ச
-
சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தி.மு.க., இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
17 Apr 2024சென்னை : சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக, இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை என அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித
-
அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
17 Apr 2024புதுடெல்லி : இந்தியாவில் சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் : நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு
17 Apr 2024பெங்களூரு : நாட்டின் ஜனநாயகத்தை காக்க மோடியை வீழ்த்த வேண்டியது அவசியம் என்றும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
அமேதி, ரேபரேலி தொகுகளில் எதில் போட்டி? ராகுல் பதில்
17 Apr 2024காசியாபாத் : ராகுல் காந்தியிடம், அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, இது பா.ஜ.க.வின் கேள்வி. மிக நல்லது என கூறினார்.