முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 18 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, வங்கக்கடலில் புயல் உருவாகி உள்ளதை அடுத்து, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு ...

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியதாவது:-

வெப்பச் சலனத்தின் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.கடலூர், நாகை, புதுச்சேரி, தூத்துக்குடி  துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. ஒடிசா அருகே வங்கக்கடலில் புயல் உருவாகி உள்ளதை அடுத்து புதுச்சேரி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து