முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை: 8-வது வீரராக கவுரவ் பிதுரி தேர்வு

செவ்வாய்க்கிழமை, 18 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

பெர்லின் : ஜெர்மனியில் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை தொடருக்கு இந்தியா சார்பில் 8-வது வீரராக கவுரவ் பிதுரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பூடான் நிராகரிப்பு

தாஷ்கண்ட்டில் நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் தொடரின்போது ஒதுக்கீடு இடம் அடிப்படையில் இந்தியாவின் கவுரவ் பிதுரி (58 கிலோ எடைப்பிரிவு) தேர்வு செய்யப்படும் வாய்ப்பை இழந்தார். ஆசியன் பாக்சிங் கான்பெடரேசன் (ஏ.எஸ்.பி.சி.) சார்பில் பூடான் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை பூடான் நிராகரித்தது. இதனால் கவுரவ் பிதுரி ஆசியன் பாக்சிங் கான்பெடரேசனின் இடஒதுக்கீடு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வேண்டுகோள் ...

இதுகுறித்து இந்திய குத்துச்சண்டை பெடரேசன், உலக சாம்பியன்ஷிப் தொடரில் கவுரவ் பிதுரி கலந்து கொள்வதை உறுதி செய்யும்படி சர்வதேச பாக்சிங் அசோசியேசனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை தொடர் ஆகஸ்ட் 25-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடக்கிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து