எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்கள் நலன் பாதுகாப்போம் என்று சட்டசபையில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உறுதிபட கூறினார். மேலும், ‘நீட்’ தேர்வை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரே மாநில அரசு அம்மாவின் அரசு தான் என்றும் அவர் கூறினார்.
முழு அழுத்தம் ...
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து நீட் தேர்வு பற்றி பேசினார். மாநில பாடத் திட்டத்தில் 4.2 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 4,675 பேர் மட்டுமே படித்துக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு எழுதியிருக்கும் 88,431 பேரில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 4,675 பேர் மட்டுமே. மீதமுள்ள 84,000 மாணவர்கள் மாநில பாடத் திட்டத்தில் +2 படித்தவர்கள். ஆகவேதான், நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டுமென்று வலியுறுத்தி, இதே சட்டமன்றத்தில், ஏகமனதாக எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி, அந்த இரண்டு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனுப்பி வைத்தோம். ஆனால் அது மத்திய அரசின் கிடப்பில் உள்ளது.குடியரசுத் தலைவர் தேர்தலில், மத்தியில் உள்ள பாரதிய ஜனதாவின் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதற்கு முன்பாக, இந்த நீட் தேர்வு மசோதாவுக்கு ஒப்புதலைப் பெற அழுத்தம் கொடுத்திருக்கலாம். அதை இந்த அரசு செய்யவில்லை. இப்போது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலைப் பயன்படுத்தியாவது, இந்த அரசு, இந்த நீட் தேர்வு பிரச்சினையிலே, முழு அழுத்தத்தைத் தர வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.
ஏகமனதாக தீர்மானம் ...
இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் பேசுகின்றபோது, நீதிமன்றத்தில், அரசினுடைய சார்பிலே அழுத்தமான வாதங்களை வைத்து, அதிலே நீங்கள் வெற்றி பெறவில்லை என்ற கருத்தைச் சொன்னார். அதற்குப் பின்பு, அரசியல் ரீதியாக, நீங்கள் இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்ற இரண்டு கருத்துகளையும் அவர் முன்வைத்திருக்கிறார். இந்த 85 சதவிகிதம், 15 சதவிகிதம் என்ற அடிப்படையில், எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் ஒரு அரசாணையை நாங்கள் பிறப்பித்தோம். அந்த அரசாணையைப் பிறப்பிப்பதற்கு முன்பேகூட, சட்ட வல்லுநர்களோடு மிகக் கடுமையாக கலந்தாலோசித்தோம். காரணம், ஏற்கெனவே, இரண்டு மசோதாக்களுக்கு சட்டமன்றத்திலே ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மிகுந்த கவனத்தோடு ...
மத்திய அரசு அதிலே இன்னும் இறுதி முடிவு எடுக்காத நிலையில், அந்த இரண்டு மசோதாக்களையும் அப்படியே போட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில், மிகுந்த கவனத்தோடுதான் நாம் அந்த விஷயத்தை அணுக வேண்டும்.அதற்குப் பின்னாலே, மாநிலவழிக் கல்வி படித்த மாணவர்களுக்கு 85 சதவிகித இட ஒதுக்கீடு என்றும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு என்றும் அரசு ஆணை போடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 15-க்கு மேற்பட்டவர்களால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அம்மா அரசு மிகுந்த கவனத்தோடு, கடந்த ஆண்டு, நாகேஸ்வரராவ், பி.பி. ராவ், இந்த ஆண்டு நாப்டே போன்ற இந்திய அளவில் இருக்கிற மூத்த வழக்கறிஞர்களை முதலமைச்சர் அம்மா உத்தரவின்பேரில் அவர்களையெல்லாம் வைத்து அரசின் சார்பில் மிகவும் அழுத்தமான வாதங்களை எடுத்துவைத்தார்.
15க்கும் மேற்பட்ட வழக்குகள்
உச்ச நீதிமன்றத்தில் அம்மா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் மூலமாக அழுத்தமான வாதங்களை வைத்ததன் அடிப்படையில்தான் அங்கு போடப்பட்ட 15க்கு மேற்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசாணைக்கு தடை விதிக்கவில்லை. இதற்கு நாங்கள் தடை கொடுக்க முடியாது. நீங்கள் உயர் நீதிமன்றத்தில் போய் பார்த்துக்கொள்ளுங்கள் என்று வழக்கை முடித்துவிட்டனர். அந்த இடத்தில் அரசு மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையோடும் செயல்பட்டது. நீங்கள் உயர் நீதிமன்றத்திற்கு சென்று பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னதற்குப் பிறகு, மீண்டும் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் இங்கே உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.
சிறப்பாகவாதாடினோம்
உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபொழுது மாநில அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞரான அட்வகேட் ஜெனரல், அன்றைக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்திருந்தாலும்கூட, அரசினுடைய சார்பில் அரைநாள் முழுக்க அரசின் வாதங்களை எடுத்துச் சொன்னார். 4.2 லட்சம் மாநில பாடத்திட்டப்படி படித்த மாணவர்கள். 4,675 பேர் சிபிஎஸ்இ மூலம் படித்தவர்கள். விகிதாச்சாரப்படி 5 சதவிகிதம் சிபிஎஸ்இ–க்கும் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 95 சதவிகிதமும் போட்டிருக்க வேண்டும். இருந்தாலும், கூடுதலாக 10 சதவிகிதம் சேர்த்து 15 சதவிகிதம் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஏன் கொடுத்தோம் என்று சொன்னால், இதுபோன்று நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுத்து, தடை ஆணை பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான். அதையும் தாண்டி வழக்கிற்குச் சென்றனர்.
மேல் முறையீடு
யார் வழக்கில் வாதிட்டார்கள் என்பது எல்லாம் உங்களுக்குத் தெரியும். அதை நான் சொல்லவில்லை. இன்றைக்கு எங்களுக்கும் வேதனையாக இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் நாம் அதற்கு தடை ஆணை பெறவில்லை. உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி தடை ஆணை கொடுத்துள்ளார். உடனே, அடுத்த நிமிடமே, அப்பீல் செய்வோம் என்று சொல்லி, நேற்று முன்தினம் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் நமக்கு நேரம் இருக்கிறது. கவுன்சிலிங் நான்கு நாட்கள் தள்ளிப்போனால் கூட இந்த நிலையைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் முதலமைச்சரும், அம்மாவின் அரசும் இன்றுவரை, இந்த நிமிடம் வரை உறுதியாக இருக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. பெஞ்சில் நாம் அப்பீல் செய்திருக்கிறோம். இன்னும் நாம் வாதிட்டு நல்ல தீர்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறபொழுது, இது முடிந்துவிட்டது என்பதுபோன்ற ஒரு செய்தியை வெளியிட வேண்டாம். இதற்கு நடுவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்த நீட் பற்றி பல்வேறு கருத்துகள் தெரிவித்திருக்கிறார்கள்.
யார் துணை நின்றது?
இங்கே இருக்கக்கூடிய ஒரு கட்சியைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சருடைய மனைவிதான் 15 வழக்குகளிலும் சிபிஎஸ்இ மாணவர்களுக்காக, மாநில மாணவர்களின் நலனுக்கு எதிராக வாதிடுகிறார்கள். ஆனால் அதே கட்சியின் தலைவர் வெளியில் சொல்கிறார், தமிழ்நாடு அரசு சரியாக வாதங்களை முன்வைக்கவில்லை என்று, தமிழ்நாடு அரசில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்காக வழக்கு மன்றத்தில் வாதிட்டது யார்? யாருமே வரவில்லை. தமிழ்நாடு அரசு மட்டும்தான் அந்த மாணவர்களுக்கு துணைநின்றது. வேறு யாராவது துணை நின்றார்களா? யார் துணை நின்றது? நீங்கள் சொல்லுங்கள். அரசியல் காரணங்களுக்காக ஒவ்வொருவரும் வெளியில் ஒரு அறிக்கையைக் கொடுக்கிறார்கள். வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது யார் அங்கே வாதிடுகிறார்கள்? என்ன நடந்து கொண்டிருக்கிறது? யார் வாதத்தை முன்வைக்கிறார்கள்? மாநிலக் கல்வி படித்த தமிழகத்திலிருக்கக்கூடிய இந்த மாணவர்களின் நிலையை யார் எடுத்துச்சொல்வது? தமிழக அரசு மட்டும்தான் தொடர்ந்து எடுத்துச் சொல்கிறது. ‘நீட்’ தேர்வு பிரச்சினையில் தமிழக மாணவர்களை பாதுகாப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்0 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
பறவைக் காய்ச்சல், அம்மை நோய் பாதிப்புகள்: அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு
23 Apr 2024சென்னை, கோடை காலத்தில் ஏற்படும் பறவைக் காய்ச்சல், அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்ம மரணம்
23 Apr 2024சென்னை, பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தடையில்லாமல் குடிநீர் வழங்குவது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கலெக்டர்களுடன் ஆலோசனை
23 Apr 2024சென்னை, தடையில்லாமல் குடிநீர் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று 12 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிப்பு
23 Apr 2024சென்னை, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (ஏப்.24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
ஆந்திர முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
23 Apr 2024ஐதராபாத், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழ்நாட்டின் எல்லையில் சோதனை மேலும் தீவிரம்
23 Apr 2024சென்னை, கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் எல்லைப்பகுதிகளில் மேலும் சோதனையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.