எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : கடந்த 17-ம் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இன்று டெல்லியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை அடுத்து நாட்டின் 14- வது ஜனாதிபதி யார் என்பது தெரியவரும்.
புதிய ஜனாதிபதியை ...
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை ஒருமனதாக தேர்ந்தெடுக்க ஆளும் பாரதிய ஜனதா சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பல எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினர். அப்போது ஒருமித்த கருத்து ஏற்படாததால் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பீகார் மாநில கவர்னராக இருந்து ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
சுற்றுப்பயணம் - ஆதரவு
இதனையடுத்து காங்கிரஸ் தலைமையிலான 17 எதிர்க்கட்சிகள் சார்பாக லோக்சபை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இரண்டு வேட்பாளர்களும் தங்களுக்கு ஆதரவு கோரி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தனர். இரண்டு வேட்பாளர்களும் தலித் இனத்தவர்கள். இருந்தபோதிலும் கொள்கை மற்றும் கோட்பாடு அடிப்படையில் போட்டியிடுவதாகவும் இருவரும் அறிவித்தனர். நாட்டில் சாதிக்கொடுமை ஒழிய வேண்டும். மனசாட்சிப்படி எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க வேண்டும் மீராகுமார் கேட்டுக்கொண்டார். அதேசமயத்தில் நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்பேன் என்றும் அதன்படி நடப்பேன் என்றும் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல்
இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தல் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. பா.ஜ.க கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் கூட்டணி சார்பில் மீராகுமார் போட்டியிட்டனர். டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்.பி.க்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மாநிலங்களை பொறுத்தவரை தலைமைச்செயலகங்களில் முதல்வர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி. கே. பழனிசாமி, சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கேரள மாநிலத்தை சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அப்துல்லா ஆகியோரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் காரணமாக வாக்களிக்கவில்லை. மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் வாக்களிக்கவில்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இருந்தபோதிலும் 99 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன.
சிறப்பு ஏற்பாடுகள்
இதற்காக டெல்லியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி சில மணி நேரத்தில் நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாது, பிஜூ ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம், தெலிங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்திருப்பதால் அவரது வெற்றி உறுதி என்று தெரிகிறது. புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவருக்கு பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தொடங்கிவிட்டது. ஜனாதிபதி மாளிகையில் இதற்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது.
துணை-ஜனாதிபதி தேர்தல்
இதற்கிடையில் துணைஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரி பதவிகாலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பாக மகாத்மா காந்தி பேரன் கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு ஐக்கிய ஜனதாதளம் ஆதரவு அளிக்கும் என்று பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு