முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழைய குற்றாலத்தில் போலீஸ்காரரை தாக்கிய சுற்றுலாப் பயணிகள் 21 பேர் கைது

புதன்கிழமை, 19 ஜூலை 2017      திருநெல்வேலி

பழைய குற்றாலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரை தாக்கியதாக விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

 பாதுகாப்பு பணி

குற்றாலத்தில் சீசனை முன்னிட்டு குற்றாலம் மெயிpன் அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பழைய குற்றாலம் வாகனம் நிறுத்தும் இடத்தில் சிலர் குடித்துவிட்டு பொதுமக்;களுக்கு இடைய+று செய்து வருவதாக புகார் வந்ததை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் அய்யப்பன் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

20 பேர் கைது

அப்போது விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ராமமுத்துராஜா (வயது 31) மற்றும் 20 பேர் கொண்ட கும்பல் போலீஸ்காரர் அய்யப்பனிடம் தகராறு செய்ததோடு அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ்காரர் அய்யப்பன் காயம் அடைந்தார். இதுபற்றி  குற்றாலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.; போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமமுத்துராஜா மற்றும் 20 பேரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து