முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கார்களை திருடிய இருவர் கைது

புதன்கிழமை, 19 ஜூலை 2017      சென்னை

சென்னை, அமைந்தகரை, கண்ணையா தெரு, எண்.82/83 என்ற முகவரியில்  கோபி, வ/35, த/பெ.ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் டவேரா கார்  சொந்தமாக வைத்துள்ளார்.  இவர் கடந்த 18.06.2017 அன்று  மாலை சுமார் 4.00 மணியளவில் தனது டவேரா காரை செனாய் நகர், முதல் குறுக்கு தெரு பகுதியில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு 8.00 மணியளவில் திரும்பி வந்து பார்த்த போது மேற்படி டவேரா காரை யாரோ திருடிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேற்படி கோபிஅமைந்தகரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு  செய்யப்பட்டது. அமைந்தகரை காவல்நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை  போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து வந்தனர்.மேலும் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து  விசாரணை செய்து மேற்படி  கார் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 1.ராஜேந்திரன், வ/35,  மதுரை 2.அன்பு செல்வம், வ/44,  உசிலம்பட்டி ஆகிய இருவரை  கைது செய்தனர்.போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட ராஜேந்திரன், அன்பு செல்வம் ஆகிய இருவரும் தனது நண்பர்களான நாகர்கோவிலை சேர்ந்த இசக்கி (எ) ஆஸ்டின் (எ) இன்பராஜ் மற்றும் ஜெகன் என்பவர்களுடன் சேர்ந்து சென்னையில் குமரன் நகர், கோட்டூர்புரம், கே.கேநகர் ஆகிய பகுதிகளில் டவேரா கார்களை திருடியுள்ளது தெரியவருகிறது. மேற்படி  ராஜேந்திரன், அன்பு செல்வம் ஆகிய இருவரும் அளித்த தகவலின் பேரில் பாடி மேம்பாலத்திற்கு அடியில் மறைவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 டவேரா கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி கார் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டு தற்போது தலைமறைவாகயுள்ள இசக்கி (எ) ஆஸ்டின் (எ) இன்பராஜ், ஜெகன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திரன், அன்பு செல்வம் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து