முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாம்பலம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பெண் கைது

புதன்கிழமை, 19 ஜூலை 2017      சென்னை

சென்னை, கண்ணம்மாபேட்டை, கார்ப்பரேஷன் காலனி முதல் தெரு, கலைமணி, /46, என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 17.07.2017 அன்று மகாலட்சுமி தெருவில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து ஹோண்டா ஆக்டிவா (பதிவு எண். கூசூ 09 6869) இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் மேற்படி மகாலட்சுமியின் கையில் வைத்திருந்த ரூ.1,100/- அடங்கிய பணப்பையை பறித்து சென்றுள்ளார். இது தொடர்பாக கலைமணி ஆர்-1 மாம்பலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்து மேற்படி வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட சாந்தி () தில் சாந்தி /46, சீனிவாச நகர் 4 வது தெரு, மாம்பலம் என்பவரை கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட சாந்தி () தில் சாந்தி சென்னையில் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் திருட்டு போன்ற குற்ற வழக்குகளில் ஈடுபட்டது தெரியவருகிறது. மேலும் சாந்தி () தில் சாந்தி மீது மாம்பலம் காவல் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவரிடமிருந்து 50 கிராம் தங்கம்,1 வைர வளையல், 1 வைர நெக்லஸ், செல்போன் மற்றும் அவர் வழிப்பறி செய்ய பயன்படுத்திய ஹோண்டா இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட சாந்தி () தில் சாந்தி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து