முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வத்தலக்குண்டுவில் மத்திய மாநில அரசு எஸ்.சி எஸ்.டி ஊழியர்கள் கூட்டமைப்பு தகவல் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா

வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு -வத்தலக்குண்டுவில் மத்திய மாநில அரசு எஸ்.சி எஸ்.டி ஊழியர்கள் கூட்டமைப்பு தகவல் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா நடந்தது. 
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு மத்திய மாநில அரசு எஸ்.சி எஸ்.டி ஊழியர்கள் கூட்டமைப்பு திண்டுக்கல் மற்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை  எஸ்.சி எஸ்.டி பணியாளர்கள் சங்கம் சார்பில் சங்க கொடி ஏற்று விழா மற்றும் தகவல் பலகை திறப்பு விழா நடந்தது.  விழாவுக்கு மணிமுருகன் தலைமை வகித்தார். நெடுஞ்சாலைத்துறை மாவட்ட செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். கருப்பையா வரவேற்றார்.  கொடியேற்றி தகவல் பலகை திறந்து மாவட்ட தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி சிறப்புரைபேசினார். Êசாலை பணியாளர்கள் சங்க துரைப்பாண்டி, வேளாண்மைத்துறை மணிமாறன், சாலைபணியாளர் சங்க கணேசன், சத்துணவு அமைப்பாளர் தமிழன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  முடிவில் இரவு காவலர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் செல்லத்துரை நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து