முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரீஸ் தீவுகள், துருக்கியில் நிலநடுக்கம்: 2 பேர் பலி- 200 பேர் காயம்

வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

Source: provided

கிரீஸ் :  துருக்கி மற்றும் கிரேக்க தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாகினர். 200 பேர் காயமடைந்தனர்.

நில நடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் மையம் கூறும்போது, “கிரேக்க தீவுப் பகுதி மற்றும் துருக்கி கடற்கரைப் பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.7ஆக பதிவாகியது” என்று கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்க பாதிப்புகள் குறித்து கிரேக்க மற்றும் துருக்கி அதிகாரிகள் தரப்பில்,”இந்த நிலநடுக்கத்தில் கிரேக்கத்திலுள்ள புராதான சிறப்பு வாய்ந்த கட்டிங்கள் பல பாதிப்படைந்தன. இதில் 2 பேர் பலியாகினர். 120 பேர் காயமடைந்தனர். துருக்கியில் 70 பேர் காயமடைந்தனர்” என்றனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் இன்னும் சிலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து