முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்தில் பக்தர்கள் 9 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

சனிக்கிழமை, 22 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பக்தர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியானார்கள். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் இருந்து ஒரு பஸ்சில் பக்தர்கள்  புனித பயணம் மேற்கொண்டனர். பஸ்சானது ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூர் அருகே சென்றபோது விபத்துக்குள்ளானது. இதில் பக்தர்கள்  9 பேர் பலியானார்கள் மற்றும் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தார்களுக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். மற்றும் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் விரைவில் குணமடைய பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து