முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

72 மீனவர்கள் - 148 படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சனிக்கிழமை, 22 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் 72 பேர்களையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 148 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும் தொடர் கதையாக இருக்கும் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் அன்றாட பிழைப்புக்காக பாரம்பரியமாக மீன்பிடித்துக்கொண்டியிருக்கும் இடத்தில் இலங்கை கடற்படையினரால் பல்வேறு சித்ரவைக்கும் கொடுமைக்கும் ஆளாக்கப்படுவதோடு அவர்களை சிறைபிடிப்பதும் உடமைகளை பறிமுதல் செய்வதும் காலம் காலமாக தடுக்கப்படாமல் நடந்துகொண்டியிருக்கிறது. கடந்த 16-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் வல்லத்தை சேர்ந்த மீனவர்கள் 4 பேர் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டியிருந்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை அடித்து சித்ரவதை செய்ததோடு காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்று சிறையில் அடைக்கச் செய்துள்ளனர். அதோடுமட்டுமல்லாது அவர்களின் படகையும் பறிமுதல் செய்துகொண்டு சென்றுவிட்டனர். அதோடு மட்டுமல்லாது கடந்த 21-ம் தேதி அன்று நாகப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் அடித்து துன்புறுத்தியதோடு அவர்களை பிடித்து காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்று சிறையில் அடைக்கச் செய்துள்ளனர்.

மேலும் அவர்களின்  விசைப்படகையும்  பறிமுதல் செய்து சிறைபிடித்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இலங்கை சிறையில் 72 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 148 விசைப்படகுகளையும் வைத்துள்ளனர். இந்த படகுகள் செயல்படுத்தப்படாமல் இருப்பதால் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கடந்த 16 மற்றுமம 21 ஆகிய தேதிகளில் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 2 படகுகளையும் சேர்த்து இலங்கை பிடித்து வைத்துள்ள 148 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து