முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடுங்கையூர் தீ விபத்தில் பலியான 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : கொடுங்கையூர் பேக்கரி கடை தீ விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை கொடுங்கையூர் நகரில் மூடியிருந்த உணவகத்தில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், பலத்த காயமடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கொடுங்கையூர், கண்ணதாசன் நகரைச் சேர்ந்த ஆனந்தன் 20.7.2017 அன்றும், கண்ணதாசன் நகரைச் சேர்ந்த மகிழவன் 21.7.2017 அன்றும் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஆனந்தன் மற்றும் மகிழவன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து