முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காபூலில் தற்கொலைப்படை தாக்குதல்: 24 பேர் பலி

திங்கட்கிழமை, 24 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த கார் குண்டு வெடிப்பு தற்கொலைப் படை தாக்குதலில் 24 பேர் பலியாகினர். 42 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “காபூலில் அரசு பணியாளர்களை எற்றி வந்த பேருந்து மீது வெடிகுண்டு நிரப்பிய கார் ஒன்று மோதியதில் 24 பேர் பலியாகினர். 42 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த தற்கொலைப்படை தாக்குதல் ஆப்கானிஸ்தானின் முக்கிய அரசியல்வாதியாக உள்ள முகமத் முககுக் இல்லத்தின் அருகே நிகழ்ந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தத் தாக்குதலை தாலிபன்கள் நிகழ்த்தியிருக்கலாம் என்று ஆப்கன் போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதத் தாக்குதலுக்கு அதிகம் உள்ளாக்கப்படும் நகரம் காபூல்தான் என்று ஐ.நா. கூறியிருந்த நிலையில் மீண்டும் தீவிரவாதிகள் காபூலில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து