முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்

திங்கட்கிழமை, 24 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அனல் காற்று வீசுகிறது. பல மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழையால் தென் மாவட்டங்களில் குளுமை பரவியது. வெப்பச்சலனத்தினால் சென்னையில் அவ்வப்போது மழை பெய்தது. ஆனால் கடந்த சில தினங்களாகவே வெப்பம் தகிக்கிறது. இரவு நேரங்களில் புழுக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து 3-வது நாளாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது. நேற்று அனல் காற்று வீசியதால் பல நகரங்களில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக கடல் காற்று தாமதமாக வீசி வருகிறது. மேலும் உள் தமிழகத்தில் வானத்தில் குறைவான மேகமூட்டமே காணப்படுகிறது. தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் வெயில் சுட்டெரித்தது. வெப்பநிலை அதிகரிப்பால் கோடை காலத்தை போல வெயில் வறுத்தெடுத்தது. அவ்வப்போது மழை என்றிருந்த சென்னையில் வெயில் சுட்டெரித்தது. சென்னை நகரில் 101 டிகிரி வெயில் பதிவானதுடன் கடல் காற்றும் குறைந்ததால் கடுமையான வெப்பம் நிலவியது.

மதுரையில் 107 டிகிரி பாரன்ஹீட், கடலூரில் 105 டிகிரி, திருச்சி மற்றும் வேலூரில் 104 டிகிரி வெயில் பதிவானது. திருத்தணியில் 103 டிகிரி, திருச்சியில் 102 டிகிரி, தூத்துக்குடி, நாகப்பட்டினத்தில் 101, காரைக்காலில் 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை குறைந்து விட்டதால் மேல்நிலை காற்றில் இருந்த ஈரப்பதம் குறைந்து, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து