முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் பொதுமக்கள் வசதிக்கென அமைக்கப்பட்ட புதிய ஆழ்துளை குடிநீர் குழாய்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார்:

திங்கட்கிழமை, 24 ஜூலை 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வசதிக்கென புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குடிநீர் குழாய்களை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் மேலக்கால் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டங்களின் மூலம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 27வார்டுகளைச் சேர்ந்த மக்களுக்கு முறைவைத்து தினம்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதனிடையே கூட்டுகுடிநீர் திட்ட இணைப்புகள் கிடைத்திடாத பகுதிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து அதில் மோட்டார் பொருத்தி சின்டெக்ஸ் தொட்டி வைத்து அதில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்கிடும் திட்டம் திருமங்கலம் நகராட்சி நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்கென திருமங்கலம் நகராட்சியின் பல்வேறு வார்டு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குடிநீர் குழாய்களை துவக்கி வைத்திடும் நிகழச்சி குதிரைசாரிகுளம் விலக்கு பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவிற்கு திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன் முன்னிலை வகித்தார்.திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி வரவேற்றார்.ஏராளமானோர் கலந்து கொண்ட இவ்விழாவில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு திருமங்கலம் நகர் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குடிநீர் குழாய் மற்றும் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதில் மதுரை புறநகர் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் அய்யப்பன்,சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் வக்கீல்.அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,திருமங்கலம் முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் சதீஸ்சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிவனாண்டி,பழனிச்சாமி,சிவன்காளை,எஸ்.பி.எஸ்.ராஜா,திருமங்கலம் நகராட்சி பொறியாளர் சக்திவேல்,சுகாதரா ஆய்வாளர் ராஜ்மோகன்,மேற்பார்வையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து