எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன் : பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து 4-வது முறையாக மகுடம் சூடியது.
உலக கோப்பை
11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தன. 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி அரைஇறுதியுடன் துரத்தப்பட்டது. இந்த நிலையில் சாம்பியன் கிரீடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், 3 முறை சாம்பியனான இங்கிலாந்தும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் சந்தித்தன. தோள்பட்டை வலியால் அவதிப்பட்ட இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் உடல்தகுதி பெற்று களம் திரும்பினார். இரு அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கேப்டன் ஒரு ரன்
‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி வின்பீல்டும், டாமி பியூமோன்டும் இங்கிலாந்தின் இன்னிங்சை நிதானமாக தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்த இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் கெய்க்வாட் பிரித்தார். அவரது பந்தில் வின்பீல்டு (24 ரன்) கிளன் போல்டு ஆனார். அடுத்த சில ஓவர்களில் பியூமோன்டும் (23 ரன்) நடையை கட்டினார்.
இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நாயகி கேப்டன் ஹீதர் நைட்டை (1 ரன்) சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் எல்.பி.டபிள்யூ. ஆக்கினார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. பிறகு டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து பார்த்த போது, பந்து ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால், ஹீதர் நைட் வெளியேற்றப்பட்டார்.
கோஸ்வாமி அசத்தல்
63 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்த இங்கிலாந்து அணியை விக்கெட் கீப்பர் சாரா டெய்லரும், நதாலி ஸ்சிவெரும் கைகோர்த்து மீட்டனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் இடைவிடாது தாக்குதல் தொடுத்து, எதிரணியின் ஸ்கோரை வெகுவாக கட்டுப்படுத்தினர். இருப்பினும் இவர்கள் இருவரும் நிலைத்து நின்று ஆடிய விதத்தை பார்த்த போது 250 ரன்களை நெருங்கும் என்றே தோன்றியது.
அணியின் ஸ்கோர் 146 ரன்களாக உயர்ந்த போது, ஒரே ஓவரில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் கோஸ்வாமி இரட்டை ‘செக்’ வைத்தார். சாரா டெய்லர் 45 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த பிரான் வில்சன் (0) எல்.பி.டபிள்யூ. ஆனார். தொடர்ந்து நதாலி ஸ்சிவெரின் (51 ரன், 68 பந்து, 5 பவுண்டரி) விக்கெட்டையும் கோஸ்வாமி கபளகரம் செய்தார்.
ரன்வேகம் குறைந்தது
அடுத்தடுத்து விக்கெட்டுகள் உருண்டதால் இங்கிலாந்தின் ரன்வேகம் இறுதி கட்டத்தில் கொஞ்சம் தளர்ந்தது. 7-வது வரிசையில் ஆடிய கேத்ரின் புருன்ட் தனது பங்குக்கு 34 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது. ஜெனி குன் (25 ரன்), லாரா மார்ஷ் (14 ரன்) களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளும், பூனம் யாதவ் 2 விக்கெட்டுகளும், ராஜேஷ்வரி கெய்க்வாட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
மிதாலி ஏமாற்றம்
தொடர்ந்து 229 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு இந்த முறையும் திருப்திகரமான தொடக்கம் அமையவில்லை. மந்தனா (0) சிரப்சோலேவின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த கேப்டன் மிதாலிராஜ் (17 ரன், 31 பந்து, 3 பவுண்டரி) ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு தேவையில்லாமல் ரன்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இதன் பின்னர் 3-வது விக்கெட்டுக்கு பூனம் ரவுத்தும், ஹர்மன்பிரீத் கவுரும் இணைந்து அணியை நிமிர வைத்ததுடன் நல்ல அடித்தளம் போட்டு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினர். அரைசதத்தை நிறைவு செய்த ஹர்மன்பிரீத் கவுர் 51 ரன்களில் (80 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வேதா கிருஷ்ண மூர்த்தி, பூனம் ரவுத்துடன் ஜோடி சேர்ந்தார். இந்திய அணி வெற்றியை நோக்கி பயணிப்பது போலவே தென்பட்டது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 191 ரன்களுடன் (42.4 ஓவர்) வலுவான நிலையில் இருந்தது.
போக்கை மாற்றிய சிரப்சோலே ...
ஆனால் அடுத்த சில நிமிடங்களில் வேகப்பந்து வீச்சாளர் சிரப்சோலே ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக புரட்டிபோட்டு விட்டார். அவரது பந்து வீச்சில் பூனம் ரவுத் (86 ரன், 115 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். தொடர்ந்து வேதா கிருஷ்ணமூர்த்தி (35 ரன்), கோஸ்வாமி (0) வரிசையாக அணிவகுப்பு நடத்தினர். விக்கெட் கீப்பர் சுஷ்மா வர்மாவும் (0) தாக்குப்பிடிக்கவில்லை. முக்கியமான கட்டத்தில் 10 ரன் இடைவெளியில் 4 விக்கெட்டுகளை தாரைவார்த்ததால் இந்திய அணி தள்ளாடியது. அதே சமயம் இங்கிலாந்து வீராங்கனைகள் உற்சாகத்தில் மிதந்தனர். பீல்டிங்கில் துடிப்புடன் செயல்பட்டு நெருக்கடி கொடுத்தனர்.
இங்கிலாந்து வெற்றி
கடைசி 3 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்தது. ஆனால் பதற்றத்தில் எல்லாவற்றையும் நமது வீராங்கனைகள் கோட்டை விட்டு விட்டனர். ஷிகா பான்டே (4 ரன்), தீப்தி ஷர்மா (14 ரன்), கெய்க்வாட் (0) ஆகியோர் ஆட்டம் இழந்து, கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் இதயங்களை சுக்கு நூறாக்கினர். முடிவில் இந்திய அணி 48.4 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்து 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சிரப்சோலே 46 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஒரு வீராங்கனையின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். வாகை சூடிய இங்கிலாந்துக்கு ரூ.4.5 கோடியும், 2-வது இடத்தை பிடித்த இந்தியாவுக்கு ரூ.2 கோடியே 12 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
அதிர்ஷ்டம் இல்லை
இந்தியா பேட் செய்து கொண்டிருந்த போது மழை மேகம் சூழ்ந்து இருந்தது. எந்த நேரத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்ற நிலைமை காணப்பட்டது. ஒரு சில நேரம் மழைத் துளிகளும் விழுந்தன. அவ்வாறு மிரட்டிய போதெல்லாம் இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது. அதாவது மழை பெய்து டக்வொர்த்-லீவிஸ் விதிமுறை கடைபிடிக்கப்பட்டால் இந்தியா வெற்றி பெறும் என்ற வகையிலேயே கணிப்புகள் அமைந்தன. 48-வது ஓவரில் கூட இந்தியா 4 ரன்கள் முன்னிலையில் இருந்தது. ஆனால் வருண பகவான் நமக்கு கருணை காட்டாமல் போய் விட்டார்.
மேலும் இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு பல பொன்னான வாய்ப்புகள் கிடைத்தன. பூனம் ரவுத் 64 ரன்னில் இருந்த போது ஸ்டம்பிங் கண்டத்தில் இருந்து மறுவாழ்வு பெற்றார். வேதா கிருஷ்ணமூர்த்திக்கு 14 ரன்னில், இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் எளிதான கேட்ச்சை வீணாக்கினார். கடைசி வரை களத்தில் இருந்த பூனம் யாதவ் (1 ரன்) கொடுத்த சுலப கேட்ச்சை குன் தவற விட்டார்.
பூனம் ரவுத் 86 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆன போது, அதை எதிர்த்து டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்ய, எதிர்முனையில் நின்ற வீராங்கனையிடம் யோசனை கேட்டார். ஆனால் அதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதால் நடுவர் அதை நிராகரித்து விட்டார். இத்தனை வாய்ப்புகள் கிடைத்தும் அதை இந்தியா பயன்படுத்த தவறியதால் கோப்பையும் கை நழுவிப்போனது.
மிதாலியின் நிறைவேறாத ஆசை
இந்திய கேப்டன் மிதாலிராஜ் 2005-ம் ஆண்டு இந்திய அணியை இறுதி ஆட்டத்திற்கு அழைத்து சென்றார். அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. 2-வது முறையாக இப்போதும் அவரது தலைமையில் இந்திய படை இறுதிப்போட்டிக்கு வந்திருந்தது. வெற்றியின் விளிம்புக்கு வந்தும் இறுதியில் கோப்பையை கோட்டை விட்டது. 34 வயதான மிதாலிராஜிக்கு இதுவே கடைசி உலக கோப்பை போட்டியாகும். அதனால் அவரது உலக கோப்பை ஆசை, கடைசி வரை கனவாகவே போய் விட்டது. இந்தியா மட்டுமல்ல, இதுவரை எந்த ஆசிய அணியும் பெண்கள் உலக கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.