எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை -மதுரை மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள ஜான் பென்னி குயிக் மக்கள் குறை தீர்க்கும் அரங்கத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் சிறுபான்மையினருக்கான “டாம்கோ லோன் மேளா” கடன்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ், துவக்கி வைத்தார்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
தமிழகஅரசு சிறுபான்மையின மக்களின் சமூகம், கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் பெரும்பான்மையினருக்கு நிகராக மேம்பாடு செய்திடும் சீரிய நோக்கில் சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.
பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கான அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்காக 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு தமிழகஅரசால் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் சிறுபான்மையினர் இனத்தை சார்ந்தவர்கள் (இஸ்லாமியர், கிருத்துவர், புத்த மதத்தினர், பாரசியர் மற்றும் சீக்கியர்கள்) சுயமாக தொழில் செய்து தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் உதவித்திட்டங்களை செயற்படுத்தி வருகிறது.
மேலும் சிறுபான்மையினர் இனத்தை சார்ந்தவர்களின் உரிமைகள் பாதுகாக்கவும் மற்றும் அவர்களுக்கு நலத்திட்டங்கள் சென்றடையவும், பாரதப்பிரதமரின் புதிய 15 அம்ச திட்டங்கள் பற்றி அறிவுறுத்தியும், சகோதரத்துவ நிலையில் நடப்பது பற்றியும் அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக சிறுபான்மையினர் நல உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி, ஆராய்ச்சிப்படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டங்களை தமிழகஅரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த வருடம் 10492 மாணவ, மாணவியர்கள் பயனடைந்தள்ளனர். இந்த வருடம் 16633 மாணவ, மாணவியர்கள் பயனடைய உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவியர் விடுதிகளில் தங்கி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக எவ்வித கட்டணமுமின்றி உணவு மற்றும் உறைவிட வசதியுடன் மதுரை கீழவாசல் என்.எம்.எஸ்.எம். மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறுபான்மையினர் மாணவியர் விடுதி 60 மாணவியர்களுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேற்படி விடுதியில் தங்கிப் பயின்று மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவியர்க்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது.
மாணவ, மாணவியரிடையே கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தமிழை முதன்மைப்பாடமாக பயின்று முதல், இரண்டு மற்றும் மூன்றாம் நிலையில் இடங்களைப் பெறும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு ரூ.30000 - மாவட்ட அளவில் பரிசுத்தொகைகள் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லீம் மகளிர் உதவிச் சங்கம் என்ற அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மதுரையில் இச்சங்கத்தின் மூலம் இதுவரை 346 பயனாளிகளுக்கு ரூ.11,81,155க்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய சங்கத்தில் 457 பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதுவரை 143 பயனாளிகளுக்கு ரூ.3,32,940க்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்துவ பிரிவினரும் புனிதப்பயணமாக ஜெருசலேம் செல்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 500 பயனாளிகளுக்கு தலா ரூ.20000 வீதம் நிதியுதவிகள் வழங்க உத்தரவுகள் வழங்கப்பட்டு 2011ம் ஆண்டிற்கு ரூ.1 கோடி வீதம் நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 1968 கிறிஸ்துவர்கள் புனிதப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மாநில அரசு மற்றும் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் நிதியுதவி பெற்று பல்வேறு நலத்திட்டங்களை டாம்கோ கழகம் தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினர் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேறி பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது. இந்த நிதியாண்டில் மதுரை மாவட்டத்திற்கு ரூ.3 கோடி கடன் வழங்க டாம்கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கிழ் தனிநபர் கடன், சுயஉதவிக்குழுக்கடன் மற்றும் கல்விக்கடன் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மேற்படி திட்டங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, ஆதார் சான்று, குடும்ப அட்டை நகல், திட்ட தொழில் அறிக்கை மற்றும் வங்கி கோரும் பிற ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ அல்லது இணைப்பதிவாளர், கூட்டுறவுச் சங்கங்கள் அலுவலகத்திலோ அல்லது மேலாண்மை இயக்குநர், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலோ இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
இச்சிறப்பு விழிப்புணர்வு முகாமில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், துணைப்பதிவாளர்கள் அமிரதா (மதுரை சரகம்), பார்த்திபன் (உசிலம்பட்டி சரகம்) அமுதா (மத்தியக் கூட்டுறவு வங்கி), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (பொ) கண்ணகி, தனி வட்டாட்சியர் சித்ரா, கண்காணிப்பாளர் ஆனந்தி, சிறுபான்மையினத்தவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.