முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி நீதிபதி கர்ணன் ஜனாதிபதியிடம் மனு

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, உச்ச நீதிமன்றம் விதித்த 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவரைக் கைது செய்யும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு கடந்த மே 9-ம் தேதி கொல்கத்தா போலீஸாருக்கு உத்தரவிட்டது. கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, தமிழகம் வந்த கொல்கத்தா போலீஸார், அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும், அவரைக் கைது செய்ய முடியவில்லை. ஜூன் 11-ம் தேதி நீதிபதி கர்ணனுக்கு 62 வயது பூர்த்தியானதால், அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. தலைமறைவு நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றார்.
இதற்கிடையே கர்ணனின் செல்போனின் அழைப்புகளை தீவிரமாக ஆய்வு செய்ததில், அவர் கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் பதுங்கியிருப்பது தெரியவந் துள்ளது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீஸார் ஜூன் 20-ம் தேதி அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் கர்ணன் தொடர்ந்து ஜனாதிபதியிடம், உச்ச நீதிமன்றம் விதித்த 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார்.

இதுதொடர்பாக நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாரா கூறியபோது, ''புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்ற உடனேயே காலை 11 மணிக்கு முதல் மனுவை மெயில் அனுப்பியுள்ளோம். என்றார்.   கோரிக்கை மனுவை தபாலில் அனுப்ப உள்ளோம்.

இறுதி வரைவு

புதிய ஜனாதிபதியிடம் அளிக்கப்படும் மனுவுக்கான இறுதி வரைவு திங்கட்கிழமையே தயார் செய்யப்பட்டு விட்டது'' என்று தெரிவித்தார்.ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் தற்போது கொல்கத்தாவில் உள்ள பிரசிடன்ஸி சிறையில் உள்ளார்.

அரசியல் சாசன சட்டப்பிரிவு 72-ன் படி, நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யவோ, குறைக்கவோ ஜனாதிபதிக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து