முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலில் தத்தளித்த காட்டு யானைகள் பத்திரமாக மீட்ட இலங்கை கடற்படை

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

கொழும்பு, இலங்கையில் உள்ள திரிகோணமலை கடற்பகுதியில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு இளம் காட்டு யானைகளை அந்நாட்டு கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கை திரிகோணமலை கடற்பகுதியில் ஒரு கடல் மைல் தொலைவில், அந்நாட்டு கடற்படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூரத்தில், கருப்பு நிறத்தில் இரண்டு விலங்குகள் மிதந்து கொண்டிருப்பதை பார்த்தனர். அருகில் சென்று பார்த்தபோது, இரண்டு காட்டு யானைகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன.

உடனே திரிகோணைமலை மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, யானைகள் நீந்திக் கொண்டிருக்கும் பகுதிக்கு அவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

பின்னர், கடற்படையினர் மற்றும் வனத்துறையினரின் வழிகாட்டுதலில், மூன்று ரோந்து கப்பல்கள் உதவியுடன், ஸ்கூபா நீர்மூழ்கி வீரர்கள் யானைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, ஸ்கூபா நீர்மூழ்கி வீரர்கள் யானைகளை சுற்றி கயிற்றைக் கட்டி கப்பல்கள் மூலம் கரைக்கு இழுத்து வந்து பின்னர் வனப்பகுதியில் விட்டனர்.

முன்னதாக, கடந்த வாரம் இலங்கையில் உள்ள முல்லைத்தீவு கடற்பகுதியில் 8 கடல் மைல் தொலைவில் கடலில் நீந்திக் கொண்டிருந்த காட்டு யானையை மீட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து