முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய மேலும் ஒரு ஏவுகணை சோதனை - வடகொரியா திட்டம்

புதன்கிழமை, 26 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

பியாங்கியாங் : ராணுவ வெற்றி தினத்தை முன்னிட்டு வடகொரியா நேற்று மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரிய போர் 1953-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி முடிந்தது. இதைக் குறிக்கும் வகையில் வடகொரியாவில் நேற்று 64-வது ராணுவ தினம் கொண்டாடப்பட உள்ளது. இதைக் குறிக்கும் வகையில் நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய மேலும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க மற்றும் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகொரியாவில் ஏவுகணையை செலுத்துவதற்கு தேவையான தளவாடங்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டதைப் பார்த்த தாக அமெரிக்க, தென்கொரிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து