எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் பேய்க்கரும்பு பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவிடத்தில் ரூ.16.5 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தினை அவரின், 2-ம் ஆண்டு நினைவு தினமான இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
புதிய மணிமண்டபம்
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் உடல் ராமேசுவரம் அருகே பேய்க்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மத்திய அரசின் சார்பில் ரூ.16 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிய மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் இரவு பகலாக கட்டி முடிக்கப்பட்டு தற்போது திறப்பு விழாவிற்காக தயராக உள்ளது. அப்துல்கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான இன்று புதிய மணிமண்டபம் திறப்பு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திரமோடி நேரில் கலந்து கொண்டு மணிமண்டபத்தினை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
பிரதமர் திறந்து வைக்கிறார்
இதற்காக இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர் நரேந்திரமோடி அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்திறங்குகிறார். அங்கிருந்து காரில் மணிமண்டபம் அமைந்துள்ள இடத்திற்கு செல்லும் பிரதமர் மோடி காலை 11.30 மணியளவில் அப்துல்கலாமின் மணிமண்டபத்தினை திறந்து வைத்து பார்வையிடுகிறார். அவருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய வர்த்தகம் மற்றம் தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், துணை-ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வெங்கையாநாயுடு, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா கலந்து கொள்கின்றனர். மேலும், மணிமண்டப திறப்பு விழாவில் கலாமின் குடும்பத்தினர் விழாவில் கலந்து கொள்கின்றனர். அப்துல்கலாம் மணி மண்டபத்தை பிரதமர் மோடி திறக்கும் போது ‘கலாம் பாடல்’ பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “கலாம் சலாம்” என்று பெயர் சூட்டப் பட்டுள்ள இந்த பாடல் மூன்று நிமிடங்கள் பாடக் கூடியதாகும். கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய அந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
பிரமாண்டமான கண்காட்சி
விழாவையொட்டி மணிமண்டபத்தில் அப்துல்கலாமின் நினைவையும், அவரின் வாழ்நாள் நிகழ்வையும் நினைவு கூறும் வகையில், பிரமாண்டமான கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில் அப்துல்கலாமின் மெழுகுசிலை அமைக்கப்பட்டுள்ளதோடு, அவரி்ன் வாழ்க்கை முறைகளை ஓவியங்களாகவும், சிலைகளாகவும், அவரின் சாதனைகளையும் சித்தரித்து வைத்துள்ளனர். இதுதவிர, மணிமண்டபத்தில் காண்பவரை கவரும் வகையில் 70 வகையான செடிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் வளர்க்கப்பட்டுள்ளதோடு, பச்சை பட்டு போர்த்தியதை போன்று புல்தரையும் அமைக்கப்பட்டுள்ளது.
விரைவு சாலை....
இந்த எழில்மிகு மணிமண்டபத்தினை பார்வையிடும் பிரதமர் நரேந்திரமோடி இதனை தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில், கலாமின் கனவான விஷன்-2020 விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இதன்பின்னர் கார் மூலம் விழா நடைபெறும் இடமான இந்திய கடலோர காவல்படை குடியிருப்பு வளாகத்திற்கு வரும் பிரதமர் மோடி 12.30 மணியளவில் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவில், ரூ.9 கோடியே 50 லட்சம் செலவில் புயலால் அழிந்து புனரமைக்கப்பட்டுள்ள தனுஷ்கோடி புதிய சாலையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்து வைக்கும் பிரதமர் மோடி இந்துகளின் புண்ணிய தலங்களான ராமேசுவரத்தையும், அயோத்தியாவையும் இணைக்கும் வகையில் புதிய விரைவு ரெயில் போக்குவரத்தையும் தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் பசுமை ராமேசுவரம் திட்டம்
மேலும், நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன்பிடிப்பு மீனவர்களுக்கு அதற்கான அனுமதி கடிதங்களை வழங்கும் பிரதமர் பசுமை ராமேசுவரம் திட்டம் முன்வடிவை வெளியிடுகிறார். மேலும், புண்ணிய தலமான ராமேசுவரம் தீவினை ஆன்மீக சுற்றுலா தலமாக அறிவித்து ராமபிரான் வந்து வழிபட்டு சென்ற தலங்களான உப்பூர், ராமேசுவரம், திருப்புல்லாணி, தேவிபட்டிணம் ஆகிய தலங்களை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டத்தினை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில், மத்திய-மாநில அமைச்சர்களும், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர். மேலும், பல்வேறு மாநில முதல்வர்களும், கவர்னர்களும் கலந்து கொள்ள உள்ளனர். விழாவின் முடிவில் கார் மூலம் செல்லும் பிரதமர் நரேந்திரமோடி மண்டபத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் பிரதமர் நரேந்திரமோடி அங்கிருந்து தனிவிமானம் மூலம் டெல்லி செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி ராமேசுவரம் தீவு பகுதி முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
5 அடுக்கு பாதுகாப்பு ...
பிரதமரின் தனிபிரிவு பாதுகாப்பு படையினர், சிறப்பு பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு பாதுகாப்பு படையினர், ஆயுதப்படையினர், உள்ளுர் போலிசார் என 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, விழா நடைபெறும் பகுதி முழுவதும் ஏறத்தாழ 3 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு ராமேசுவரம் தீவு முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் ஆயுதம் தாங்கி நின்று வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர். கடலோர பகுதி முழுவதும் சீருடை அணியாத போலீசார் தீவிர ரோந்து சுற்றி அன்னியர் நடமாட்டம் உள்ளதா என்று கண்காணித்து வருகின்றனர். இதுதவிர, கடல்பகுதியில் கடற்கரை ஓரம் கடலோர காவல்குழும போலீசாரும், அதன்பின்னர் இந்திய கடலோர காவல்படையினரும், அதன்பின்னர் இந்திய கடல் எல்லை வரையிலும் கடற்படையினரும் ரோந்து கப்பல்களில் ரோந்து சுற்றி கடல் பகுதி முழுவதையும் பாதுகாப்பின்கீழ் கொண்டு வந்துள்ளனர். பிரதமர் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு விரிவான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.