முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லல்லு குடும்பத்தினருடன் மோதல் எதிரொலி: பீகார் முதல்வர் நிதீஷ்குமார் திடீர் ராஜினாமா

புதன்கிழமை, 26 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

பாட்னா, லல்லு குடும்பத்தினருடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக முதல்வர் பதவியை நிதீஷ்குமார் ராஜினாமா செய்தார். மறுபக்கம் நிதீஷ்குமாருக்கு ஆதரவு அளிக்கவும், மாநிலத்தில் கூட்டணி அரசு அமைக்கவும் பாரதிய ஜனதா முயற்சி செய்து வருகிறது.

லல்லு - நிதீஷ் மோதல்

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. அரசுக்கு லல்லு தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளமும் காங்கிரசும் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி அரசில் லல்லுவின் மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவுக்கு துணைமுதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் லல்லு குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. அப்போது முறைகேடாக சொத்து குவித்திருப்பதாக புகார் எழுந்தது. இதனையொட்டி துணைமுதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும்படி பிரசாத் யாதவை முதல்வர் நிதீஷ்குமார் கேட்டுக்கொண்டார். இதற்கு பிரசாத் யாதவ் மறுத்துவிட்டார். இதனால் நிதீஷ்குமாருக்கும், லல்லு பிரசாத் யாதவுக்கும் இடையே மோதல்போக்கு அதிகரித்தது. இருவருக்கும் சமாதானம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் துணைமுதல்வர் ராகுல்காந்தி முயற்சி செய்தார். இது பலன் அளிக்கவில்லை.

திடீர் ராஜினாமா ...

இந்தநிலையில் முதல்வர் பதவியில் இருந்து நிதீஷ்குமார் ராஜினாமா செய்துவிட்டார். ராஜினாமா கடிதத்தை மாநிலத்தில் தற்காலிக கவர்னராக இருக்கும் கேசரிநாத் திரிபாதியிடம் கவர்னர் மாளிகைக்கு சென்று கொடுத்துவிட்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நிதீஷ்குமார், என் மீது லல்லு பிரசாத் யாதவ்ஜி கூறியுள்ள குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக பொதுமக்களிடம் கூறுமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் கூறமறுத்து வருகிறார். இதனால் எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்னால் முதல்வர் பதவியில் இருந்து பணியாற்ற முடியாது. அதனால் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டேன் என்றார்.

பாரதிய ஜனதா முயற்சி ...

இதற்கிடையில் நிதீஷ்குமார் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை லல்லு கட்சி வாபஸ் பெற்றால் அரசு கவிழ்ந்துவிடாமல் இருக்க ஆதரவு கொடுக்க பாரதிய ஜனதா தயாராகி வருகிறது. முடிந்தளவு அரசு அமைக்கவும் முயற்சி செய்து வருகிறது. இதுதொடர்பாக நேற்று கட்சியின் தலைவர் அமீத்ஷா தலைமையில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டதாக தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து