முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்; கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 31 ஜூலை 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதன்பின்பு பயனாளி ஒருவருக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலையினை வழங்கினார்.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.  
 தொடர்ந்து,  கடலாடி வட்டம், மாராந்தை கிராமத்தைச் சேர்ந்த கருப்பாயி என்பவர் தனது பேரக்குழந்தையின் கல்விக்கு உதவித்தொகை வேண்டி விண்ணப்பத்திருந்தார்.  அதன்படி கலெக்டர் தனது விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.10ஆயிரத்திற்கான  காசோலையினை வழங்கினார். இக்கூட்டத்தில்; சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள்,  பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து