முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்டத்திற்குள் நுழைய எதிர்ப்புகொளத்தூர் மணி திண்டுக்கல்லில் தடுத்து நிறுத்தம்

செவ்வாய்க்கிழமை, 1 ஆகஸ்ட் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -மதுரை மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதால் கொளத்தூர் மணி திண்டுக்கல் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
திராவிடர் விடுதலை கழக மாநிலத் தலைவராக இருப்பவர் கொளத்தூர் மணி. மதுரை காளவாசலில் வழக்கறிஞர்கள் தமிழை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொளத்தூர் மணி தனது ஆதரவாளர்களுடன் 7 கார்களில் சேலத்தில் இருந்து வந்து கொண்டிருந்தார். கொளத்தூர் மணி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கருதி அதற்கு போலீசார் தடை விதித்தனர்.
எனவே திண்டுக்கல் _ மதுரை மாவட்ட எல்லையில் பள்ளபட்டி பிரிவில் கொளத்தூர் மணியின் கார் வந்த போது சமயநல்லூர் பொறுப்பு டி.எஸ்.பி. முருகேஷ், நிலக்கோட்டை டி.எஸ்.பி. கார்த்திகேயன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் தடுத்து நிறுத்தினர். கொளத்தூர் மணியிடம் போலீசார் ஞிண்ட நேரம் எடுத்துக்கூறி திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவரது ஆதரவாளர்கள் கேட்காமல் மதுரைக்கு செல்ல வேண்டும் என தெரிவித்தனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து