முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்திரமேரூரில் அப்துல்கலாம் நினைவு தினப் மௌனப் ஊர்வலம்

புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017      திருவள்ளூர்

உத்திரமேரூர் கலைமகள் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவியர்களும் மற்றும் அப்துல்கலாம் நற்பணி இயக்கமும் இணைந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக மௌன ஊர்வலம் நடந்தது. முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் உத்திரமேரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் மௌன முன்னிலை வகித்து ஊர்வலத்தினை துவக்கி வைத்தார்.

 ஊர்வலமானது சின்னநாரசம் பேட்டை தெருவில் துவங்கி, காஞ்சிபுரம் சாலை, பஜார் வீதி வழியாக மாணவ- மாணவியர்கள் மௌன ஊர்வலம் சென்றனர். அதில் அப்துல்கலாமின் வாசகங்களை கையில் ஏந்தியவாறு, சென்றனர். பின்னர் பஜார் வீதியில் உள்ள அப்தூல்கலாமின் திரு உருவ படத்திற்கு மெழுகு வத்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் நசீருதின், அப்துல்கலாம் நற்பணி இயக்க நிர்வாகிகள் பழனி, சிவராமன் கண்ணன், சௌந்தரராஜன், மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சூர்யா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து