முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் உறுப்பினர்களுக்கு பாலியல் தொல்லை: இம்ரான்கான் மீது பெண் எம்.பி குற்றச்சாட்டு

புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லமாபாத், கட்சியின் பெண் உறுப்பினர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக இம்ரான்கான் மீது அந்நாட்டு பெண் எம்.பி குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆபாச குறுஞ்செய்தி...

பாகிஸ்தானில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்று தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி. இந்த கட்சியின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் உள்ளார். இம்ரான் கான் மீது அவரது சொந்த கட்சியை சேர்ந்த பெண் எம்.பி ஒருவர் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

குலாலாய் குற்றச்சாட்டு

தெற்கு வரிஸிஸ்தான் பழங்குடியின பகுதியைச்சேர்ந்த ஆயிஷா குலாலாய் எம்.பி இம்ரான் கான் கட்சியில் இருந்து விலகியதோடு அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”கட்சியில் பெண்களை மிகவும் மோசமாக நடத்தியதாலேயே இம்ரான் கானின் கட்சியில் இருந்து விலகினேன். கடந்த 2013 ம் ஆண்டு முதல் இம்ரான் கான் எனக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை அளித்து வருகிறார். தற்போது அவரது தொல்லை பொறுக்க முடியாததாலேயே கட்சியிலிருந்து வெளியேறி உள்ளேன்.

பாதுகாப்பாக இல்லை...

தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியில் உள்ள பெண்கள் பாதுகாப்பாக இல்லை. இம்ரான் கானின் நடவடிக்கையை எந்த பெண்ணும் சகித்துக்கொள்ள மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார். தனது எம்.பி பதவியையும் ராஜினாமா செய்துள்ள ஆயிஷா, நவாஸ் ஷெரீப் கட்சியில் தான் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆயிஷாவின் இந்த குற்றச்சாட்டுக்களை இம்ரான்கான் கட்சியினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து