முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் வாத்துக்களை கைது செய்து சிறையிலடைத்த போலீஸ்!

புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், வாத்துகளை கைது செய்து சிறையிலடைத்த விநோதம் அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது.

4 வாத்துகள்...

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் சுற்றித்திரிந்த 4 வாத்துகள் அப்பகுதியில் உள்ள எரிவாயு நி‌லையத்திற்குள் புகுந்த‌ள்ளது. இதுகுறித்து எரிவாயு நிலைய ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வாத்துகளை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று காவலில் வைத்துள்ளனர்.

பொறுப்புணர்ச்சி!

சட்டப்படி எரிவாயு நிலையத்திற்குள் அனுமதியின்றி யார் சென்றாலும் அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பது வழக்கம். இந்நிலையில் கடமை உணர்ச்சிமிக்க போலீசார் வாத்துகளை கைது செய்தும் தங்களின் பொறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து