எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரலெட்சுமி விரதம் என்பது பதினாறு வகை செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமி தேவியின் அருள் வேண்டி கடைபிடிக்கப்படும் நோம்பாகும். சுமங்கலிப் பெண்கள் ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை தினத்தன்று தனது தாலி பாக்கியம் நிலைத்திடவும், கணவன் நல்ல ஆரோக்கியத்துடனும், வீட்டில் செல்வம் சேர்ந்திடவும் விரதம் கடைபிடிக்கின்றார்கள். விரதம் மேற்கொள்ளும் நாளில் வீட்டை நன்கு சுத்தம் செய்து விளக்கேற்றி பத்தி, சாம்பிராணி போட்டு நறுமணம் ஏற்றுவார்கள். கலசம் ஒன்றை எடுத்து, அதில் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு ஆகியவற்றை போட்டு பட்டுத்துணியால் கலசத்தை அலங்கரிப்பார்கள். கலசத்தின் மேல் மா இலையுடன் தேங்காய் ஒன்றை வைப்பர். பின்பு தங்கம், வெள்ளி மற்றும் பஞ்சலோகத்தாலான லெட்சுமி உருவ படத்தை அல்லது காகிதத்தாலான லட்சுமி படத்தை வைத்து மஞ்சள், குங்குமம் இட்டு கிழக்குப் பக்கமாக வைத்து வணங்குவர். இனிப்பு பலகாரங்கள் படைத்து தீபாராதனை காட்டி வழிபடுவர். கலசத்தில் வைத்துள்ள மஞ்சள் சரடை விரதம் இருந்தவர்கள் கையில் கட்டுவர். லட்சுமிக்கு படைக்கப்பட்ட பொருட்களுடன் தாம்பூலம், மஞ்சள், குங்குமம், புடவை ஆகியவற்றை வந்திருந்த சுமங்கலிப் பெண்களுக்கு தானமாக கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வர். நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்ததை முடித்துக் கொண்டு தாமும் உண்டு விரதத்தை முடிப்பர். அன்று முழுவதும் லலிதா சகஸ்ரநாமம், அஷ்டலட்சுமி தோத்திரம் பாராயணம் செய்வர். பிறகு மாலை வேலையில் உற்றார், உறவின் மற்றும் சுற்றத்தார் வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் பெற்று மகிழ்வர்.
துளசி, மா, நெல்லி, வில்வம் போன்றவை லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. இவைகள் இருக்கும் இடங்களில் மகாலட்சுமி வாசம் செய்ததாகவும் கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள சீனிவாசப் பெருமாள் ஆலயத்தில் நெல்லி தல விருட்சமாக உள்ளது. இங்கு அலமேலு மங்கை வெள்ளிக்கிழமை தோறும் அலமேலு மங்கைத் தாயார் சன்னதியில் கோ பூஜையுடன் விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. இந்த நேரத்தில் மஞ்சள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை வாங்கி நெற்றியில் திலகமிட்டுக் கொள்பவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள் என்று சுமங்கலிப் பெண்களால் நம்பப்படுகிறது. ஆகையால் வெள்ளிக்கிழமை தோறும் இந்த சன்னதியில் பெண்கள் கூட்டம் அலைமோதும்.
மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள்
மலர்களில் சிறந்தது தாமரை. தாமரை செல்வத்தைக் கொடுக்கும். பொன்னின் அளவைப் பத்மநிதி, சங்கநிதி என்பர். பத்மம் என்றால் தாமரை. எல்லாத் தெய்வங்களுமே பத்மத்தில்தான் அமர்ந்துள்ளார். பத்மாசனத்தில் அமர்வதே சிறப்பு. திருமகளுக்குரிய இடம் தாமரை. ஆகையால் அவளை மலர்மகள் என்பர். விளக்கின்றி பூஜையில்லை. எல்லாத் தெய்வங்களையும் விளக்கொளியில் வழிபடலாம். ஆகையால் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாய் ஆண்டவரைக் கண்டார். எல்லாத் தெய்வகங்களும் விளக்கில் இருப்பினும் விளக்கை லட்சுமியாகக் கருதுவது நம் மரபு.
நெல்லி ஆயுளை வளர்க்கும், ஆரோக்கியம் தரும். அதனடியில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லி திருமாலின் அருள் பெற்றது. ஹரிபலம் என்று இதற்கு ஒரு பெயரும் உண்டு. நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால் தான் ஏகாதசிப் பலன் உண்டு. வில்வ மரத்தடியில் ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி தோன்றினாள். வைணவத் தலமான ஸ்ரீரங்த்தில் தல விருட்சம் வில்வம். திருநகரிக்கு வில்வாரண்யம் என்று பெயர். திருவஹிந்திரபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால் தான் அர்ச்சனை, வில்வமரத்தடியில் செல்வம் தரும் நாயகி வசிக்கிறாள்.
பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா. பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் குடி கொண்டிருக்கிறார்கள். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப்பது 32 வகை அறங்களுள் ஒன்றதாகும். புனிதமான பசுவின் பாதம் பட்ட இடத்தில் பாவம் அண்டாது. அதன் கால் தூசு பட்ட இடத்தில் செல்வம் கொழிக்கும். பசுவிடமிருந்து வெளிப்படும் கோஜலம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. இதனைப் பஞ்சகவ்யம் என்பார்கள். வாசலில் சாணம் தெளித்தால் வீட்டைச் சாணத்தால் மெழுகினாலும் கிருமிகள் அண்டாது, லட்சுமி வருவாள். பஞ்சகவ்யம் பருகினால் நோய் தீரும். பஞ்சகவ்யம் பரம ஒளஷதம் என்பார்கள். யானையின் மத்தகம் பிரணவம் போன்றது. அங்கே திருமகள் வீற்றிருக்கிறாள். வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடத்தில் லட்சுமி வாசம் செய்வாள்.
தாம்பூலம் மங்களகரமானது. சுபகாரியங்களுக்கும் பூஜைக்கும் தேவையானது. தாம்பூலத்தை மாற்றிக் கொண்டால் சம்மதம் தெரிவித்தற்கான பொருள். சங்கும் அதன் ஒலியும் மங்களகரமானவை. அதில் மலர்மகள் வாசம் செய்கிறாள். தர்ம சிந்தனை உடையாரின் உள்ளத்திலும் லட்சுமி குடியிருப்பாள். சந்தனத்தில் மகாலட்சுமி இருக்கிறாள். தெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. சுபகாரியங்களில் சந்தனம் அவசியம் வைத்திருப்பர். வேள்விப்புகை உயிர் காக்கும். வேள்விப்புகை ஆரோக்கியம் தரும். வேள்விப்புகையில் வானம் பொழியும். வையகம் செழிக்கும். பணிவுடனும், இன்சொல்லும் உடையவர்களிடத்திலும் திருமகள் குடியிருக்கிறாள். தூய கன்னியர்கள் தெய்வ நலம் பொலிபவர்கள். அவர்களித்தில் லட்சுமி கடாட்சம் உண்டு. பெண்ணைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று சொல்வதும் உண்டு. கலகமில்லாத மகளிர் வாழும் இடத்திலும் மகாலட்சுமி குடி கொண்டிருப்பாள். பெண்களைத் தெய்வமாக மதிப்பவர்கள் இடத்தில் லட்சுமி வாசம் செய்வாள். உள்ளங்கையில் லட்சுமி உள்ளாள் என்பார்கள். காலையில் எழுந்ததும் இரு கைகளையும் சேர்த்து பார்க்க வேண்டும். கை என்றாலே சக்தி என்று தான் பொருள். தூய்மையான ஆடை அணிகிறவர் இடங்களிலும் மகாலட்சுமி இருக்கிறாள். மிதமாக உண்பவர்களிடத்திலும், பகிர்ந்துண்டு வாழும் மனிதர்களிடத்திலும் லட்சுமி இருக்கிறாள்.
திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது. திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு அருள்புரியும்படி திருமாலைத் தூண்டுபவள் திருமகளே. தானியக் குவியல்களிலும், கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல்களிலும்,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.