முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் பிரதமர் பதவிக்கான வாரிசாக அறிவிக்கப்பட்ட தம்பியை ஓரம்கட்டும் நவாஸ் ஷெரீப்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பிரதமர் பதவிக்கான வாரிசாக அறிவிக்கப்பட்ட தனது தம்பி ஷாபாஸ் ஷெரீபை முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முழுமையாக ஓரம் கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கிய நவாஸ் ஷெரீப் அண்மையில் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியைச் சேர்ந்த ஷாகித் ககான் அப்பாஸி கடந்த 1-ம் தேதி இடைக்கால பிரதமராக பதவியேற்றார்.

நவாஸின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் பஞ்சாப் மாகாண முதல்வராக உள்ளார். அவர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யான பிறகு நிரந்தர பிரதமராக பதவியேற்பார் என்று ஆளும் கட்சி அறிவித்தது.

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக தனது சகோதரர் ஷாபாஸ் ஷெரீபை, குடும்ப பிரச்சினை காரணமாக நவாஸ் முழுமையாக ஓரம் கட்டி வருவதாக ‘டான்’ நாளிதழ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளும் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் அண்மையில் கூறியபோது, பஞ்சாப் மாகாண அரசியலுக்கு ஷாபாஸ் ஷெரீப் மிகவும் அவசியம் என்று வலியுறுத்தி வருகின்றனர். நவாஸின் ஏற்பாட்டின் பேரிலேயே இவ்வாறு பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஷாபாஸ் ஷெரீபுக்கு பதிலாக நவாஸின் மனைவி கல்சூம் புதிய பிரதமராக பதவியேற்கக் கூடும் என்று ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நவாஸின் மகள் மரியம் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படக்கூடும் என்றும் ‘டான்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து