முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      கடலூர்

கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   தலைமையில்   நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கென மனுக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெறப்பட்டது.மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 350 மனுக்கள் வரப்பெற்றன.

 நடவடிக்கை

பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என கலெக்டர்  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு தெளிவான பதிலை அளிக்கவேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் கடலூர் தேவணாம்பட்டினம் கடல் அலையில் சிக்கி, செம்மண்டலம் சண்முகம் தெருவை சேர்ந்த மோகன்ராஜ்-.சித்ரா தம்பதியனரின் மகன் கிரிராஜ் உயிரிழந்தமைக்காக .சித்ரா அவர்களிடம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினை கலெக்டர் டி.பி.ராஜேஷ்,  வழங்கினார்.  இக்குறைகேட்புக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .கோ.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.சண்முகம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோவிந்தன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மதிவாணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராமு உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து