முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவறான தகவல்களை பரப்பும் அமைச்சர் கந்தசாமி கவர்னர் கிரன்பெடி எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      புதுச்சேரி
குஜராத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் கார் மீது கல்வீசி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த சனிக்கிழமை தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கந்தசாமி, கவர்னர் கிரன்பெடியை கடுமையாக விமர்சித்தார். கவர்னரால் புதுவை அரசே முடங்கி இருக்கிறது. ஏற்கனவே விமான சேவை திட்டத்தை நிறுத்த முயன்றார். இப்போது துறைமுக திட்டத்தை நிறுத்த முயற்சி  செய்கிறார் என்று கூறினார். இதற்கு கவர்னர் கிரன்பெடி ஆட்சேபம் தெரிவித்து தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- அமைச்சர் கந்தசாமி தொடர்ந்து என் மீது தவறான தகவல்களை பரப்பி வருகிறார். இதன் மூலம் மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார். இது போன்ற செயல்களை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். விமான நிலைய திட்டத்தில் என்ன நடந்தது, அதில் ஏதேனும் முறைகேடு நடந்ததா என்பது பற்றி முறையாக ஆய்வு செய்து அனைத்து விபரங்களும் மக்களுக்கு தெரியப் படுத்தப்படும். விமான சேவை திட்டம் தொடர்பாக வந்த கோப்புகளை கவர்னர் அலுவலகம் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. புதுவையில் செலவிடப்படும் பல கோடி ரூபாய்பணத்தை உரிய முறையில் பாதுகாப்பதற்காக கவர்னர் அலுவலகம் தலையிடுகிறது. மேலும் இது பல்வேறு விசாரணைக்கும் ஆளாகக் கூடிய ஒன்றாகும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து