முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் தாலுகாவில் மழைநீரால் நிரம்பி மறுகால் பாய்ந்திடும் ஊரணிகள்: வேளாண் பணிகளில் விவசாயிகள் தீவிரம்:

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த   பலத்த மழை பெய்த காரணமாக பெரும்பாலான  ஊரணிகள் அனைத்தும் மழைநீரால் நிரம்பி  மறுகால் பாய்ந்து வருவதால் வேளாண் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம்  திருமங்கலம் தாலுகாவில் மழை பெய்து நீண்ட நாட்களாகி இருந்ததால் கண்மாய்களும் ஊரணிகளும் பெரும்பாலும் வறண்டு காணப்பட்டன.இதனால் திருமங்கலம் தாலுகாவில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக வேளாண் பணிகள் முடங்கி விவசாயிகள் பெரும் அவதிக்கு ஆளாகியிருந்தனர்.இதனிடையே ஆடிப்பெருக்கு சமயத்தில் தங்களது விவசாய பணிகளுக்கென மழை வருமென விவசாயிகள்  ஆர்வமுடன் காத்திருந்தனர். அப்போது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் ஏக்கத்தையும் தீர்த்திடும் வகையில் கடந்த வாரம் தொடர்ந்து 3நாட்களாக பலத்தமழை பெய்த காரணத்தினால் திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாட்டி வதைத்து வந்த வெப்பம் வெகுவாக தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.இந்நிலையில் ஆடிபெருக்கின் போது விவசாயிகள் தங்களது நிலத்தில் விதைகளை தூவி ஆடிப்பட்டம் தேடிவிதைப்பது வழக்கமான ஒன்றாகும்.
இதனிடையே கடந்த  வாரத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக திருமங்கலம் தாலுகா முழுவதிலும் பலத்த மழை வெளுத்து வாங்கி வருவதால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் ஆடிப்பட்டம் தொடங்கி தங்களது விளைநிலங்களில் விதைத்திடும் பணிகளை ஆர்வமுடன் தொடங்கி விட்டனர்.இதனிடையே திருமங்கலம் தாலுகாவில் உள்ள பெரும்பாலான கிராமத்திலிருக்கும் கண்மாய்கள் தவிர்த்து ஊரணிகள் அனைத்தும் தொடர் மழை காரணமாக நிரம்பி வழிந்து மறுகால் பாய்ந்தது. அதிலும் குறிப்பாக சிவரக்கோட்டை கிராமத்திலுள்ள  எல்லைஊரணி,தலப்பா ஊரணி,சூரியகாந்தி ஊரணி,கருப்பாயூரணி கரிசல்காளம்பட்டி கிராமத்திலுள்ள மலையூரணி,குரவாயூரணி,போனப்பன்ஊரணி,அகத்தாபட்டி ஊரணி உள்ளிட்ட பெரும்பாலான ஊரணிகள் அனைத்தும் மழைநீரால் நிரம்பி மறுகால் பாய்ந்தன.இதன் காரணமாக திருமங்கலம் தாலுகாவில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் விவசாய பெருமக்கள் தங்களது விளை நிலங்களை சீரமைத்து வேளாண் பணிகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து