முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜகவும் - ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ராகுலை கொல்ல முயற்சிக்கின்றன: லல்லு குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ராகுல் காந்தியை கொல்ல முயற்சிப்பதாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

கார் மீது தாக்குதல்

கடந்த சில தினங்களுக்கு முன் குஜராத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ராகுல் காந்தியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக உள்ளூர் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இந்த விவகாரத்தை முன்வைத்து மக்களவையில் காங்கிரஸ் கட்சி புயலை கிளப்பியது. காங்கிரஸ் கட்சியினரின் கடும் அமளியால் மக்களவை எந்த அவைநடவடிக்கைகளும் இன்றி நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சூழலில் நேற்று பாட்னாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  லல்லு பிரசாத் யாதவ், “பாரதீய ஜனதாவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ராகுல் காந்தியை கொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளன. இதன்காரணமாகவே அந்த அமைப்பினர் ராகுல் காந்தியை குறிவைத்துள்ளனர்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து