எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணி நீலகிரி மாவட்டத்தில் நான்கு இடங்களில் நேற்று நடைபெற்றது.
துண்டு பிரசுரம்
ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணியை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கொடி அசைத்து தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது-
தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 35 கிராம ஊராட்சிகளிலும் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் பணியானது முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 19 கிராம ஊராட்சிகள் முற்றிலும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கமற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மீதமுள்ள 16 கிராம ஊராட்சிகளில் திறந்தவெளிஇயல் மலம் கழிக்கும் முறை அறவே இல்லை என்ற நிலையினை ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
உறுதிமொழி
பேரணி லோயர்பஜார், மார்க்கெட், காபிஹவுஸ் சந்திப்பு, கமர்சியல் சாலை, பிரீக்ஸ் சாலை வழியாக பிரீக்ஸ் பள்ளியை அடைந்தது. பின்னர் அங்கு முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் என்ற தலைப்பில் உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் தலைமையில் மாணவ, மாணவியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிகளில் மகளிர் திட்ட திட்ட இயக்குநர் ரேணுகா தேவி, ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் காசிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்கிருஷ்ணன், ரவிச்சந்திரன், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி, கிரசண்ட் பள்ளி, ஜோசப் பள்ளி, பிரீக்ஸ் பள்ளி, சி.எம்.எம்.பள்ளி உள்ளிட்ட
பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர்கள், மகளிர் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குன்னூர்
இதேபோல் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் குன்னூர் பெட்போர்டு பகுதியில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியை கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலர் ஆறுமுகம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி மவுண்ட் ரோடு வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. பேரணியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவராஜ், பாரதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் பள்ளி,. புனித மரியன்னை பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
கோத்தகிரி
அதேபோன்று கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் சார்பில் கோத்தகிரி பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி நரசிம்மன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி மார்க்கெட், ஜான்சன் சதுக்கம், ராம்சந்த் வழியாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது. பேரணியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபிரகாஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், மகளிர் குழுவினர், அரசு மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூடலூர்
கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட கல்வி அலுவலர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தை அடைந்தது. பேரணியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன், சிவக்குமார், பாரதியார் பல்கலைக்கழக முதல்வர் பழனிச்சாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாரதியார் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.