முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுக்கு இடையூறாக உள்ள கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வேண்டும்: தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-திருமங்கலம் பகுதி மக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ள கப்பலூர் டோல்கேட்டை உடனடியாக அகற்றிட வேண்டும் என திருமங்கலம் நகரில் நடைபெற்ற மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலம் நகர் உசிலம்பட்டி சாலையில் உள்ள வி.எஸ்.ஆர் மஹாலில் நேற்று மாலை நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட தே.மு.தி.க பொறுப்பாளர் அழகர் தலைமை வகித்தார்.கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர் பாலன் முன்னிலை வகித்தார்.திருமங்கலம் நகரச் செயலாளர் ராதாகிருஷ்ணன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் உச்சப்பட்டி கார்த்திகேயன் ஆகியோர் வரவேற்று பேசினார்கள். ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மாநில தொழிற்சங்க பேரவை செயலாளர் முஜிபுர்ரஹ்மான் கலந்து கொண்டு  வரும் 25ம்தேதி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமான கொண்டாடுவது குறித்து சிறப்புரையாற்றினார்.பின்னர் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட வேண்டும்,திருமங்கலம் பகுதி மக்களுக்கு இடையூறாக உள்ள கப்பலூர் டோல்கேட்டை அகற்றிட வேண்டும்,புறநகர் பேருந்துநிலையம் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் தனபாண்டியன்,செந்தில்குமார்,ஒன்றிய செயலாளர்கள் மனிகண்டன்,தர்மராஜ்,மலைச்சாமி,மாவட்ட மாணவரணி செயலாளர் பாரத்,பொதுக்குழு உறுப்பினர் செல்வம்,சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து