முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூரில் .எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் : அரசு தலைமைக் கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      அரியலூர்
Image Unavailable

 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், வட்டார சுகாதார நிலையத்தில் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பாக கண் சிகிச்சை முகாம் முகாம் மாவட்ட கலெக்டர் க.லட்சுமிபிரியா, தலைமையில் நடைபெற்றது.

 கண்சிகிச்சை முகாம்

இம்முகாமினை அரசு தலைமைக் கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் துவக்கி வைத்தார்கள்.ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார்.இம்முகாமில் 1221-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு, 97- மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முகாமினை துவக்கி வைத்து, தமிழக அரசு தலைமைக் கொறடா பேசியதாவது :-

பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் செயல்படுத்திய ஏழை, எளியோர் நலன் காக்கும் ஏராளமான நலத்திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 23.08.2017 அன்று அரியலூரில் சிறப்பாக நடைபெறவுள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிச்சாமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்கள்.

விழாவிற்கான ஏற்பாட்டுப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்டத்தில் மாணவ, மாணவியர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். திருமானூரில் ஏழை, எளியோருக்காக பொது சுகாதாரத்துறையின் சார்பில் நேற்று (09.08.2017) நடைபெறுகிற கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து வருகிறார்கள். இவர்களில் அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோரை பரிசோதனையில் கண்டறிந்து, அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கண் அறுவைச் சிகிச்சை செய்யப்படவுள்ளனர். மக்களுக்கு பயன்தரும் இந்த சிறப்பான முகாமினை ஏற்பாடு செய்த மருத்துவம், ஊரக நலப்பணிகள், பொது சுகாதாரத்துறையினரை பாராட்டுகிறேன் என தமிழக அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் பேசினார். இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மருத்துவர்.ஹேமசந்த்காந்தி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், அரியலூர் கோட்டாட்சியர் மோகனராஜன்;, இணை இயக்குநர் மருத்துவம் நலப்பணிகள் மருத்துவர்.செல்வராஜன், கண் மருத்துவர்;.கொளஞ்சிநாதன், துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் எம்.ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர்கள் மருத்துவர்.மணிவண்ணன் திருமானூர், மருத்துவர்.ஆர்.மேகநாதன் செந்துறை, மருத்துவாகள் மருதுபாண்டியன், சதீஸ்குமார், அரியலூர் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தர்மலிங்கம் மற்றும் ஏராளமான பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து