எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : விழுப்புரம் - கடலூர் மாவட்டங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு ரூ.1000 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புதிய திட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-
விழுப்புரம் மாவட்டத்தில் கடல் நீரை நன்னீராக்கும் புதிய திட்டம் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களிலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் வழியோர ஊரகக் குடியிருப்புகளுக்காக நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகக் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு, ஏற்கனவே கொள்ளிடம் ஆற்றை நீர் ஆதாரமாகக் கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டத்தில், தற்போது 140 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சியால் நீர் ஆதாரம் குறைந்து விட்டதால், விழுப்புரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்றும் வகையில், நிரந்தர தீர்வு காணும் பொருட்டு, மாற்று ஏற்பாடாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆசியுடன், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணத்திலிருந்து விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி நகராட்சிகள், உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, சங்கராபுரம் பேரூராட்சிகள் மற்றும் உளுந்தூர்பேட்டை, கணை, விக்கிரவாண்டி, திருநாவலூர், மரக்காணம், வானூர் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் 1000 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
ரூ.198 கோடி...
இந்தத் திட்டத்தினால் அந்த பகுதியில் இருக்கின்ற மக்களுக்கு நிலையான குடிநீர் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, மற்றொரு அறிவிப்பு. விழுப்புரம் நகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு 198 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் விழுப்புரம் நகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதிக்கான பாதாள சாக்கடைத் திட்டம் 198 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். விழுப்புரம் நகராட்சியில் ஏற்கனவே பாதாள சாக்கடைத் திட்டம், நகரின்மையப் பகுதியில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஜெயலலிதா ஆசியுடன் விழுப்புரம் நகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதியான பாணாம்பட்டு, சலமேடு, வழுவடத்தி, எருமணந்தங்கள், காரகுப்பம் ஆகிய பகுதிகளுக்கு ஆசியவளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 198 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்தநேரத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
எம்.ஜி.ஆர். பெயர்...
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நினைவு கொள்ளும் வகையில் இந்த மாவட்டத்தில் புதிதாக துவக்கப்பட்டுள்ள மகளிர் கலைமற்றும் கல்லூரிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி” என பெயர் சூட்டப்படும். மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கம் “டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கம்” என அழைக்கப்படும். மேலும், நகரப்பகுதியில் அமைந்துள்ள இரயில்வே கேட்டால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு விழுப்புரம் - வெங்கடேசபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையில், விழுப்புரம் நகரத்திற்கு செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலை எண் 45-ல் சாலை மேம்பாலம் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் அறிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நடத்தை விதிமீறல் புகார்: வரும் 29-ம் தேதி பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புது டெல்லி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 29-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.