முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாகனப் பதிவிற்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம்: தெலுங்கானா அரசு உத்தரவு

வியாழக்கிழமை, 10 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்: வாகன பதிவிற்கு அதன் உரிமையாளர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

வாகன பதிவிற்கு ...
இலவச சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்து வருகின்றது. இறப்புக்கு கூட ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வாகன பதிவிற்கு அதன் உரிமையாளர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

95 லட்சம் வாகனங்கள்
அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தெலுங்கானா போக்குவரத்து துறை அமைச்சர் மகேந்தர் ரெட்டி இந்த உத்தரவை பிறப்பித்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில்(தெலுங்கானா) சுமார் 95 லட்சம் வாகனங்கள் உள்ளது. அதேபோல், பெரிய அளவில் வாகன மாற்றம் நடைபெறுகிறது. வாகனங்கள் பதிவு மற்றும் வேறு ஒருவருக்கு மாற்ற ஆதார் எண்ணை கட்டாயமாக்குங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து