முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோலைமலை முருகன் கோவிலுக்கு 108 மயில் காவடிகள் இலுப்பூர் பக்தர்கள் பாதையாத்திரையாக எடுத்து வந்தனர்

வெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

 அழகர்கோவில் - புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் திருமுருகன் வார வழிபாட்டு சபையின் சார்பாக 44ம் ஆண்டு 108 மயில் காவடிகள் முருக பக்தர்கள் பாதையாத்திரையாக இலுப்பூரிலிருந்து புறப்பட்டனர். மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையில் உள்ள ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலுக்கு 5 நாட்களுக்கு பிறகு கொன்னையூர் சிங்கம்புனரி, மேலூர் வழியாக வந்து சேர்ந்தனர். அங்கு மேளதாளம் முழங்க காவடியாட்டம் ஆடி கோவில் உள்பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வந்தனர்.
பின்னர் சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், விபூதி, இளநீர், புஷ்பம், திரவியம் உள்ளிட்ட 36 வகையான அபிஷேகங்கள் அலங்காரம் தீபாரனைகள் நடந்தது. தொடர்ந்து அறுசுவை உணவு பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை வழிபாட்டு சபையின் தலைவர் முத்து விநாயகம், பொருளாளர் சேகரன், பிரகாஷ் மற்றும் முருக பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக  தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில் கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் முருகன் கோவில் பணியாளர்கள் காவடி குழுவினர்களை வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து