எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 85 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
நேற்றுடன் நிறைவு
பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வந்தது. கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய பொதுப்பிரிவு கவுன்சிலிங் நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் உள்ள 518 பொறியியல் கல்லூரிகள் மூலம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 339 இடங்களை நிரப்புவதற்கு நடந்த கலந்தாய்வில் பாதி இடங்கள் (50 சதவிதம்) மட்டுமே நிரம்பியுள்ளன.
ஆர்வம் குறைவு...
நேற்று முன்தினம் வரை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 963 பேர் அழைக்கப்பட்டதில் 83,562 பேர் மட்டும் கல்லூரிகளை தேர்வு செய்து ஒதுக்கீட்டு இடங்களை பெற்றனர். கலந்தாய்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆர்வம் படிப்படியாக குறைந்து வருவதால் ‘ஆப் சென்ட்’ ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
90 ஆயிரம் இடங்கள் ....
கடந்த காலங்களில் ஒப்பிடும்போது இந்த வருடம் ஆப்சென்ட் விகிதம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வரை 83,562 இடங்கள் மட்டும் நிரம்பியுள்ளன. 91,894 பொறியியல் இடங்கள் காலியாக இருந்தன. நேற்று பிற்பகலுடன் நிறைவடைந்த கலந்தாய்வில் 3 ஆயிரம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டாலும் கூட 89 ஆயிரம் முதல் 90 ஆயிரம் இடங்கள் வரை காலியாக வாய்ப்பு உள்ளது.
மோகம் குறைந்து ...
கடந்த 2014-ம் ஆண்டு ஒரு லட்சத்து 27 ஆயிரம் இடங்கள் நிரம்பின. 2013-ல் ஒரு லட்சத்து 24 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேர்ந்தனர். இப்படி படிப்படியாக குறைந்து இந்த வருடம் மொத்தம் 86 ஆயிரம் இடங்கள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் படிப்பு மீது இருந்த மோகம் குறைந்து தற்போது கலை அறிவியல் கல்லூரிகள் பக்கம் திரும்பி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அரசு மற்றும தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் பட்ட வகுப்புகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
மெக்கானிக்கல் பிரிவில்...
இந்த வருடம் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப் பிரிவில்தான் அதிகம் பேர் சேர்ந்துள்ளனர். எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் 2-வது இடத்திலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-வது இடத்திலும் உள்ளது. ஏரோனாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் 2141 இடங்கள் இருந்த போதிலும் 1013 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். ஆயிரம் இடங்களுக்கு மேலாக காலியாக கிடக்கின்றன. அதே நிலையில்தான் ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் பாடப்பிரிவும் உள்ளது.
துணை கலந்தாய்வு ...
சிவில் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் 25,257 இடங்கள் இருந்த போதிலும் 8 ஆயிரம் இடங்கள்தான் நிரம்பியுள்ளன. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (இ.இ.இ.) பாடப்பிரிவில் 22,519 இடங்கள் இருந்தாலும் 9,749 இடங்கள்தான் நிரம்பின. இந்த வருடம் முதல் பட்டதாரி குடும்பத்தை சேர்ந்த 44 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். துணை கலந்தாய்வு 17-ந் தேதி நடக்கிறது. அதில் 1000 இடங்கள் நிரம்பினாலும் மீதமுள்ள இடங்கள் காலியாக கிடக்கும். அதனைத் தொடர்ந்து 18 ம் தேதி ஆதிதிராவிடர் அருந்ததியர் பிரிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களில் ஆதிதிராவிடர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நடைபெறும். பொறியியல் படிப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1 ம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
மூட வேண்டிய நிலைக்கு...
ஆண்டுக்கு ஆண்டு காலி இடங்கள் அதிகரித்து வருவதால் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கல்லூரி எதுவென்று ஆய்வு செய்து அதில் சேரவே மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் எதிர்காலத்தில் சிறந்த கல்லூரிகள் மட்டுமே நிலைத்து நிற்க முடியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.