முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.ஸ்டாலின் நினைப்பது எதுவும் நடக்காது: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

வெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : மு.க.ஸ்டாலின் நினைப்பது எதுவும் நடக்காது என்றும், அ.தி.மு.க. அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார் என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

சென்னையில் நேற்று நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்” என்று கூறினார்.
அதற்கு பதில் அளித்து அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் எட்டாக்கனிக்கு கொட்டாவி விடுபவர். அ.தி.மு.க. அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார். கருவாடு மீனாகாது ஸ்டாலின் நினைத்தது எதுவும் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து