எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து கட்சியின் முக்கிய தலைவரான சரத்யாதவ் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம் உடைவது உறுதியாகியுள்ளது.
கருத்து வேறுபாடு
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதீஷ்குமாருக்கும் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான சரத்யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதாதளம் திடீரென்று நிதீஷ்குமார் முடிவின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளித்தது. அதேசமயத்தில் துணைஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்திக்கு நிதீஷ்குமார் ஆதரவு கொடுத்தார்.
பா.ஜ.க ஆதரவுடன்...
இந்தநிலையில் வருமான வரித்துறையினரின் சோதனையையடுத்து பீகார் மாநிலத்தில் துணைமுதல்வராக இருந்த ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவர் லல்லு பிரசாத் மகன் பதவி விலக வேண்டும் என்று நிதீஷ்குமார் உத்தரவிட்டார். இதற்கு லல்லு மறுத்துவிட்டார். அதோடு மட்டுமல்லாது நிதீஷ்குமார் அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்ததை லல்லு வாபஸ் பெற்றார். நிதீஷ்குமார் அரசு பெரும்பான்மையை இழந்தது. முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக பாரதிய ஜனதா ஆதரவுடன் நிதீஷ்குமார் மீண்டும் முதல்வரானார். பாரதிய ஜனதா ஆதரவை பெற்றதற்காக ஐக்கிய ஜனதாதளத்தின் மற்றொரு முக்கிய தலைவரான சரத்யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் நிதீஷ்குமாருக்கும் சரத்யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு வெளிப்படையாகவே வெடித்தது. சரத்யாதவ் புதிய கட்சி தொடங்கபோகிறார் என்றும் கூறப்பட்டது.
சரத்யாதவ் நீக்கம்
இந்தநிலையில் ஐக்கிய ஜனதாதளத்தின் ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து சரத்யாதவ் நீக்கப்பட்டுள்ளார். ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. ராஜ்யசபையில் ஐக்கிய ஜனதாதளத்திற்கு 10 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு டெல்லியில் கூடி கட்சியின் ராஜ்யசபை உறுப்பினரான அலி அன்வர் அன்சாரியை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தனர்.
இந்தநிலையில் நேற்று ஐக்கிய ஜனதாதளத்தின் ராஜ்யசபை எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் ஐக்கிய ஜனதாதளம் ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து சரத்யாதவை நீக்கினர். அவருக்கு பதிலாக கட்சியின் மற்றொரு தலைவரான ஆர்.சி.பி. சிங்கை தலைவராக நியமித்தனர். பின்னர் அந்த எம்.பி.க்கள் சேர்ந்து துணைஜனாதிபதியும் ராஜ்யசபை தலைவருமான வெங்கய்யா நாயுடுவை சந்தித்து, தலைவர் பதவியில் இருந்து சரத்யாதவ் நீக்கப்பட்டதற்கான கடிதத்தை கொடுத்தனர். இதை கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.சி.பி சிங், முதல்வர் நிதீஷ்குமாருக்கு நம்பிக்கைக்குரியவர்.
சுற்றுப்பயணம்
ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சரத்யாதவ் தற்போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது பற்றி சரத்யாதவ் கூறுகையில், தாம் இன்னும் மிகப்பெரிய கூட்டணியான ராஷ்ட்ரீய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணியில்தான் இருப்பதாக உணருகிறேன் என்றார். ஐக்கிய ஜனதாதளம் கட்சியானது நிதீஷ்குமார் கட்சி மட்டுமல்ல எனது கட்சியும்தான். உண்மையான ஐக்கிய ஜனதாதளம் என்னுடன்தான் இருக்கிறது. நீதிஷ்குமாரிடம் அரசு மட்டும்தான் இருக்கிறது என்று சரத்யாதவ் மேலும் கூறினார்.
இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் நிதீஷ்குமார் இணைய வேண்டும் என்று பாரதிய ஜனதாதளம் தலைவர் அமீத்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.