எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து கட்சியின் முக்கிய தலைவரான சரத்யாதவ் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம் உடைவது உறுதியாகியுள்ளது.
கருத்து வேறுபாடு
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதீஷ்குமாருக்கும் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான சரத்யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதாதளம் திடீரென்று நிதீஷ்குமார் முடிவின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளித்தது. அதேசமயத்தில் துணைஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்திக்கு நிதீஷ்குமார் ஆதரவு கொடுத்தார்.
பா.ஜ.க ஆதரவுடன்...
இந்தநிலையில் வருமான வரித்துறையினரின் சோதனையையடுத்து பீகார் மாநிலத்தில் துணைமுதல்வராக இருந்த ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவர் லல்லு பிரசாத் மகன் பதவி விலக வேண்டும் என்று நிதீஷ்குமார் உத்தரவிட்டார். இதற்கு லல்லு மறுத்துவிட்டார். அதோடு மட்டுமல்லாது நிதீஷ்குமார் அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்ததை லல்லு வாபஸ் பெற்றார். நிதீஷ்குமார் அரசு பெரும்பான்மையை இழந்தது. முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக பாரதிய ஜனதா ஆதரவுடன் நிதீஷ்குமார் மீண்டும் முதல்வரானார். பாரதிய ஜனதா ஆதரவை பெற்றதற்காக ஐக்கிய ஜனதாதளத்தின் மற்றொரு முக்கிய தலைவரான சரத்யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் நிதீஷ்குமாருக்கும் சரத்யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு வெளிப்படையாகவே வெடித்தது. சரத்யாதவ் புதிய கட்சி தொடங்கபோகிறார் என்றும் கூறப்பட்டது.
சரத்யாதவ் நீக்கம்
இந்தநிலையில் ஐக்கிய ஜனதாதளத்தின் ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து சரத்யாதவ் நீக்கப்பட்டுள்ளார். ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. ராஜ்யசபையில் ஐக்கிய ஜனதாதளத்திற்கு 10 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு டெல்லியில் கூடி கட்சியின் ராஜ்யசபை உறுப்பினரான அலி அன்வர் அன்சாரியை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தனர்.
இந்தநிலையில் நேற்று ஐக்கிய ஜனதாதளத்தின் ராஜ்யசபை எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் ஐக்கிய ஜனதாதளம் ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து சரத்யாதவை நீக்கினர். அவருக்கு பதிலாக கட்சியின் மற்றொரு தலைவரான ஆர்.சி.பி. சிங்கை தலைவராக நியமித்தனர். பின்னர் அந்த எம்.பி.க்கள் சேர்ந்து துணைஜனாதிபதியும் ராஜ்யசபை தலைவருமான வெங்கய்யா நாயுடுவை சந்தித்து, தலைவர் பதவியில் இருந்து சரத்யாதவ் நீக்கப்பட்டதற்கான கடிதத்தை கொடுத்தனர். இதை கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.சி.பி சிங், முதல்வர் நிதீஷ்குமாருக்கு நம்பிக்கைக்குரியவர்.
சுற்றுப்பயணம்
ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சரத்யாதவ் தற்போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது பற்றி சரத்யாதவ் கூறுகையில், தாம் இன்னும் மிகப்பெரிய கூட்டணியான ராஷ்ட்ரீய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணியில்தான் இருப்பதாக உணருகிறேன் என்றார். ஐக்கிய ஜனதாதளம் கட்சியானது நிதீஷ்குமார் கட்சி மட்டுமல்ல எனது கட்சியும்தான். உண்மையான ஐக்கிய ஜனதாதளம் என்னுடன்தான் இருக்கிறது. நீதிஷ்குமாரிடம் அரசு மட்டும்தான் இருக்கிறது என்று சரத்யாதவ் மேலும் கூறினார்.
இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் நிதீஷ்குமார் இணைய வேண்டும் என்று பாரதிய ஜனதாதளம் தலைவர் அமீத்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.