எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து கட்சியின் முக்கிய தலைவரான சரத்யாதவ் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம் உடைவது உறுதியாகியுள்ளது.
கருத்து வேறுபாடு
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதீஷ்குமாருக்கும் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான சரத்யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதாதளம் திடீரென்று நிதீஷ்குமார் முடிவின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளித்தது. அதேசமயத்தில் துணைஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்திக்கு நிதீஷ்குமார் ஆதரவு கொடுத்தார்.
பா.ஜ.க ஆதரவுடன்...
இந்தநிலையில் வருமான வரித்துறையினரின் சோதனையையடுத்து பீகார் மாநிலத்தில் துணைமுதல்வராக இருந்த ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவர் லல்லு பிரசாத் மகன் பதவி விலக வேண்டும் என்று நிதீஷ்குமார் உத்தரவிட்டார். இதற்கு லல்லு மறுத்துவிட்டார். அதோடு மட்டுமல்லாது நிதீஷ்குமார் அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்ததை லல்லு வாபஸ் பெற்றார். நிதீஷ்குமார் அரசு பெரும்பான்மையை இழந்தது. முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக பாரதிய ஜனதா ஆதரவுடன் நிதீஷ்குமார் மீண்டும் முதல்வரானார். பாரதிய ஜனதா ஆதரவை பெற்றதற்காக ஐக்கிய ஜனதாதளத்தின் மற்றொரு முக்கிய தலைவரான சரத்யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் நிதீஷ்குமாருக்கும் சரத்யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு வெளிப்படையாகவே வெடித்தது. சரத்யாதவ் புதிய கட்சி தொடங்கபோகிறார் என்றும் கூறப்பட்டது.
சரத்யாதவ் நீக்கம்
இந்தநிலையில் ஐக்கிய ஜனதாதளத்தின் ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து சரத்யாதவ் நீக்கப்பட்டுள்ளார். ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. ராஜ்யசபையில் ஐக்கிய ஜனதாதளத்திற்கு 10 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு டெல்லியில் கூடி கட்சியின் ராஜ்யசபை உறுப்பினரான அலி அன்வர் அன்சாரியை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தனர்.
இந்தநிலையில் நேற்று ஐக்கிய ஜனதாதளத்தின் ராஜ்யசபை எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் ஐக்கிய ஜனதாதளம் ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து சரத்யாதவை நீக்கினர். அவருக்கு பதிலாக கட்சியின் மற்றொரு தலைவரான ஆர்.சி.பி. சிங்கை தலைவராக நியமித்தனர். பின்னர் அந்த எம்.பி.க்கள் சேர்ந்து துணைஜனாதிபதியும் ராஜ்யசபை தலைவருமான வெங்கய்யா நாயுடுவை சந்தித்து, தலைவர் பதவியில் இருந்து சரத்யாதவ் நீக்கப்பட்டதற்கான கடிதத்தை கொடுத்தனர். இதை கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.சி.பி சிங், முதல்வர் நிதீஷ்குமாருக்கு நம்பிக்கைக்குரியவர்.
சுற்றுப்பயணம்
ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சரத்யாதவ் தற்போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது பற்றி சரத்யாதவ் கூறுகையில், தாம் இன்னும் மிகப்பெரிய கூட்டணியான ராஷ்ட்ரீய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணியில்தான் இருப்பதாக உணருகிறேன் என்றார். ஐக்கிய ஜனதாதளம் கட்சியானது நிதீஷ்குமார் கட்சி மட்டுமல்ல எனது கட்சியும்தான். உண்மையான ஐக்கிய ஜனதாதளம் என்னுடன்தான் இருக்கிறது. நீதிஷ்குமாரிடம் அரசு மட்டும்தான் இருக்கிறது என்று சரத்யாதவ் மேலும் கூறினார்.
இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் நிதீஷ்குமார் இணைய வேண்டும் என்று பாரதிய ஜனதாதளம் தலைவர் அமீத்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கேரளாவில் நடந்த மாதிரி வாக்கு பதிவில் முறைகேடு ஏதும் இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் முறைகேடு ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட கூகுள் ஊழியர்கள் 28 பேர் பணி நீக்கம்
18 Apr 2024வாஷிங்டன், கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Apr 2024புது டெல்லி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை விவிபேட் சீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுளள்து.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.