முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை மண்ணில் ராகுல், தவான் ஜோடி சாதனை

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

ராகுல், தவான் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 188 ரன்கள் சேர்த்து சாதனை படைத்துள்ளனர்.

இந்தியா- இலங்கை இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ராகுல், தவான் இலங்கை அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 188 ரன்கள் சேர்ந்து சாதனை படைத்துள்ளது. இலங்கை மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக முதல் விக்கெட்டிற்கு அதிக ரன்கள் எடுத்து இந்த ஜோடி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பாக 1993ல் மனோஜ் பிராபாகர் மற்றும் நவ்ஜோட் சிந்து ஜோடி முதல் விக்கெட்டிற்கு 173 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ராகுல், தவான் ஜோடி முறியடித்தது.

சிறப்பாக விளையாடிய ராகுல் 135 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். தவான் 123 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் இரண்டு டெஸ்ட் போடிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய நிலையில் மூன்றாவது டெஸ்டிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து