முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திறந்த வெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக உருவாக்க விழிப்புணர்வு பேரணி தேனி கலெக்டர் வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2017      தேனி
Image Unavailable

தேனி.- தேனி-ஆர்.சி உயர்நிலைப்பள்ளியிலிருந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தேனி சுகாதார இயக்கத்தின் சார்பில் திறந்த வெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக உருவாக்குவது குறித்து 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை இன்று (11.08.2017) மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தேனி சுகாதார இயக்கத்தின் சார்பில் பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தினை தவிர்க்கும் பொருட்டும், பாதுகாப்பற்ற முறையில் சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டும், திறந்தவெளியில் மலம் கழிப்பதினால் ஏற்படும் நோய் பரவுதலை தடுப்பதற்கும், சுகாதாரத்தினை மேம்படுத்திடவும் கழிப்பறை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் பள்ளி மாணவ, மாணவியர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணிகள், துண்டு பிரசுரங்கள் வாயிலாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களின் குடியிருப்புகளில் கழிப்பறைக்கு தேவையான இட வசதி இருந்தால் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000ஃ- அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இடவசதி இல்லாத இல்லங்களுக்கு பொது கழிப்பறையையும் ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் உள்ள தேனி மற்றும் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் ஆகஸ்ட்-2017 மாதமும், போடிநாயக்கனூர் மற்றும் உத்தமபாளைம் ஆகிய ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் செப்டம்பர்-2017 மாதமும், மயிலாடும்பாறை, பெரியகுளம் மற்றும் கம்பம் ஆகிய ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் அக்டோபர்-2017 மாதமும், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியப்பகுதியில் நவம்பர்-2017 மாதமும் திறந்த வெளி கழிப்பிடமற்ற பகுதிகளாக மாற்றுவதற்கு தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கும், பொது கழிப்பறை கட்டுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, கிராமப்புற பொதுமக்கள் திறந்த வெளிகளில் மலம் கழிப்பதை அறவே தவிர்த்து இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இப்பேரணியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வடிவேல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி.வசந்தி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து